News January 19, 2026
கெங்கவல்லியில் வசமாக சிக்கிய பெண்: அதிரடி கைது

கெங்கவல்லி சுற்றுவட்டாரத்தில் அரசு மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து எஸ்ஐ., கணேஷ் குமார் கெங்கவல்லி வட்டாரத்தில் தீவிரமாக தணிக்கையில் ஈடுபட்டார். அப் பொழுது, ஆணையாம்பட்டியை சேர்ந்த கலைச்செல்வி, வீட்டில் பதுக்கி அரசு மதுபானங்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. கலைச்செல்வியை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Similar News
News February 1, 2026
சேலம் இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் நடைபெறும் குற்றச் சம்பவங்களைத் தடுப்பதற்கும், குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்வதற்கும் காவல்துறையினர் தினசரி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி, பிப்ரவரி 01 அன்று இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவலர்களின் விபரங்கள் மற்றும் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவசர காலங்களில் சம்பந்தப்பட்ட காவலர்களை தொடர்புகொள்ளலாம் அல்லது 100 அழைக்கவும்
News February 1, 2026
சேலம்: வாக்காளர்கள் கவனத்திற்கு

சேலம் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!
News February 1, 2026
சேலம்: ரூ.3 லட்சம் கடனில் 50% தள்ளுபடி! APPLY NOW

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற<


