News January 19, 2026
தி.மலை அருகே துடிதுடித்து பலி

செங்கம்–தி.மலை சாலையில் உள்ள சுண்டைக்காய் பாளையம் சந்திப்பு அருகே நடந்த விபத்தில், பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் சென்ற மேல் கரியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜவேல் (60) மீது பின்னால் வந்த கார் மோதியது. பலத்த காயமடைந்த அவர் செங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த விபத்தில் குமார் (48) காயமடைந்தார். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Similar News
News February 2, 2026
தி.மலை: கடைகளில் வாங்கிய பொருட்கள் சரியில்லையா?

சில சமயம் நாம் கடைகளில் வாங்கும் பொருட்கள் தரமற்றோ, பழைய பொருட்களாகவோ வரலாம். இதை கடை ஓனர் மாற்ற மறுத்தாலோ (அ) பணத்தைத் தராவிட்டாலோ நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் புகார் செய்யலாம். வாங்கிய பொருள் 15 நாட்களுக்குள் சேதாரம் இல்லாமல், வாங்கிய நிலையில் இருந்தால், அதை மாற்ற, பணத்தைத் திரும்பப் பெற உரிமை உண்டு. தி.மலை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை (044-28589055) தொடர்பு கொள்ளலாம். ஷேர்
News February 2, 2026
தி.மலை: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

தி.மலை மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின்<
News February 2, 2026
கிரிவலம் முடிந்து தூய்மை பணிகள் தீவிரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலையில் தை மாத பௌர்ணமி கிரிவலம் நேற்று நடைபெற்றது. அதனை தொடர்ந்து, கிரிவலப் பாதைகளில் துப்புரவு பணியாளர்கள் மூலம் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இன்று (பிப்.02) ஆட்சியர் க.தர்ப்பகராஜ் கிரிவலப் பாதைகளை நேரில் பார்வையிட்டு, துப்புரவு பணிகளின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.


