News May 6, 2024
23 நாய் இனங்களை அரசு தடை செய்தது ஏன்?

மூர்க்க இன நாய்களின் தாக்குதலால் மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்ததால், அத்தகைய 23 நாய் இனங்களை வளர்க்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதில், அமெரிக்கன் புல்டாக், பிட்புல் டெரியர், ராட்வீலர், மாஸ்டிப் உள்ளிட்ட நாய் இனங்கள் அடங்கும். இத்தகைய நாய் இனங்கள் பெரும்பாலும் காவலுக்காக வளர்க்கப்படுபவை. இவற்றுக்கு முறையாகப் பயிற்சி அளிக்காவிட்டால், அந்நியர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.
Similar News
News August 23, 2025
வந்தா CM தானா? விஜய்யை சீண்டிய செல்லூர் ராஜு

தமிழகத்துக்கு ஒரு MGR மட்டும் தான் என செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். MGR-யை அனைவரும் கொண்டாடலாம், ஆனால் மக்களை பொறுத்தவரை MGR கட்சி என்றால் அது அதிமுக தான் என்றார். அண்ணாவிடம் பல வருடங்கள் அரசியல் பாடம் படித்த பின் தான் MGR அரசியலுக்கு வந்தார். ஆனால் காதல் பட நகைச்சுவை காட்சி போல் வந்தால் CM-ஆக தான் வருவேன் என விஜய் செயல்படுவதாக விமர்சித்தார்.
News August 23, 2025
ஆகஸ்ட் 23: வரலாற்றில் இன்று

*1956 – திரைப்பட நடிகர் மோகன் பிறந்த தினம்.
*2011 – லிபியா உள்நாட்டுப் போர்: அதிபர் கடாஃபி அப்பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
*1991 – உலகின் முதல் இணையதளம்(WWW) பொதுமக்களுக்காக திறந்து விடப்பட்டது.
*2023 – சந்திரயான்-3 நிலவின் தென்துருவத்தில் பிரக்யான் ரோவர் உதவியுடன் தரையிறங்கியது.
*அடிமைகள் ஒழிப்பு மற்றும் அதன் வணிகத்தையும் நினைவூட்டும் பன்னாட்டு நாள்.
News August 23, 2025
RSS-யிடம் விஜய் பாடம் படிக்க வேண்டும்: அர்ஜுன் சம்பத்

ஒழுக்கமாக மாநாடு நடத்துவது குறித்து இந்து, RSS அமைப்புகளிடமும் விஜய் கற்றுக் கொள்ள வேண்டும் என அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். TVK-ன் 2-வது மாநாடு டாஸ்மாக் கடைகளில் நடைபெற்ற மாநாடு போல் இருந்ததாகவும் விமர்சித்தார். மேலும், வரும் தேர்தலில் 3 சதவீத வாக்குகளை மட்டுமே தவெக பெறும் என்றும், மநீம., போல் விரைவில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் எனவும் தெரிவித்தார்.