News May 6, 2024
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சிறப்புகள்

திருக்கச்சியேகம்பம் என பழைய சமய நூல்களில் குறிப்பிடப்படும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், தேவாரம் பாடலில் இடம்பெற்றுள்ள தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். பஞ்சதலங்களில் ஒன்றான இக்கோயில் 1300 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் எனக் கருத்தப்படுகிறது. பல்லவர் காலந்தொட்டு நாயக்கர் காலம் வரை இங்கு திருப்பணி செய்ததற்கு சான்றுகள் கிடைக்கப்பெற்றன. இத்தலம் மிகவும் தொன்மையான வரலாற்றைத் தாங்கி நிற்கிறது.
Similar News
News July 5, 2025
தொழிலாளர்களுக்கு ரூ.3,000 பென்ஷன் (1/2)

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்களை வழங்க மத்திய அரசு இ-ஷ்ரம் கார்டு வழங்கி வருகிறது. இதன் மூலம் மாதம் ரூ.3,000 பென்சன்/ ரூ.2 லட்சம் வரை விபத்து காப்பீடு பெற முடியும். <
News July 5, 2025
இ-ஷ்ரம் கார்டு மூலம் யாரெல்லாம் பயனடையலாம் (2/2)

கட்டுமான தொழிலார்கள், விவசாயக்கூலிகள், வீட்டு வேலை செய்வோர், சலவை தொழிலாளர், எலக்ட்ரிஷியன், ஓலா, ஊபர், ஸ்விக்கி, சோமட்டோ ஊழியர்கள் போன்ற தினக்கூலி பெறும் தொழிலாளர்கள் போன்று ESIC or EPFO போன்ற திட்டங்களில் கீழ் வராத தொழிலார்கள் அனைவரும் அமைப்பு சாரா தொழிலார்களாக கருதப்படுவர். இவர்கள் அனைவரும் இ-ஷ்ரம் கார்டு மூலம் மத்திய அரசு திட்டங்களை பெற முடியும். உங்களுக்கு தெரிந்த தொழிலாளர்களுக்கு பகிரவும்.
News July 5, 2025
காஞ்சிபுரத்திற்கு இப்படி ஒரு அர்த்தமா?

காஞ்சி என்பது பசுமை நிறம் அல்லது ஒரு வகை மரத்தை குறிக்கும் சொல், புரம் என்பது நகரம் என பொருள் தரும். ஆகவே, காஞ்சிபுரம் என்பது பசுமை வாய்ந்த நகரம் என்ற அர்த்தம் கொண்டது. புராணங்களில் காஞ்சிபுரம் பிரம்மா தோற்றுவித்த புனித நகரம் எனவும், பல தெய்வங்களின் திருத்தலமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சைவ, வைணவ, பௌத்த, சமண மதங்கள் இங்கே செழித்து வந்துள்ளன. இதன் காரணமாகவே இது தெற்கின் காசி என அழைக்கப்படுகிறது.