News January 19, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று (ஜன -18) இரவு 10 மணி முதல் இன்று காலை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News February 7, 2026
காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு!

கும்மளாபுரம் அடுத்துள்ள கங்கனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி வெங்கடேசப்பா (60) என்பவர் இன்று மாலை மளிகை பொருட்களை வாங்குவதற்காக கும்ளாபுரத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது காட்டு யானை தாக்கி அவர் உயிரிழந்தார். உடலை எடுக்க விடாமல் கிராம மக்கள், சாலை அமைக்க வேண்டும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என போராட்டம் நடத்தினர். காவல்துறை வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
News February 7, 2026
கிருஷ்ணகிரியில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கம்!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை ஊக்குவிக்கும் வகையில் “வணிக சந்திப்பு” நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சி. தினேஷ் குமார் ஐ.ஏ.எஸ். பங்கேற்று, மகளிர் தயாரிப்புகளை பார்வையிட்டு சந்தை வாய்ப்புகள் குறித்து ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சி மூலம் மகளிர் தொழில் வளர்ச்சிக்கு புதிய ஊக்கம் கிடைத்தது.
News February 7, 2026
கிருஷ்ணகிரி: G Pay பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!


