News May 6, 2024
ஈரோடு : 97.42 சதவீத தேர்ச்சி

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு தேர்வில் ஈரோடு மாவட்டத்தில் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 97.42 ஆகும். இதில் 9,864 மாணவர்கள், 11,362 மாணவிகள் என மொத்தம் 21,226 பேர் தேர்வு எழுதினர். இதில் 9,540 மாணவர்கள், 11,138 மாணவிகள் என மொத்தம் 20,678 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்த மாணவர்கள் 96.72%, மாணவிகள் 98.03% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநிலத்தில் ஈரோடு 97.42 சதவீதத்துடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
Similar News
News August 27, 2025
ஈரோடு: இலவச வீட்டு மனை வேண்டுமா?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவசமாக வீட்டுமனை பெறலாம்.இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சூப்பர் திட்டம் குறித்து மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News August 27, 2025
ஈரோடு: பணம் அச்சடிக்கும் தொழிற்சாலையில் வேலை!

ஈரோடு மக்களே இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் பணம் அச்சடிக்கும் தொழிற்சாலையில் பிராசசிங்
அசிஸ்டண்ட் மற்றும் மேனேஜர் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் ஐடிஐ, டிப்ளமோ, B.E/B.Tech படித்திருந்தாலே போதுமானது. ரூ.24,500 முதல் ரூ.88,638 வரை சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News August 27, 2025
ஈரோடு மக்களே கவனம்! போலீசார் அறிவுறுத்தல்

விநாயகர் சிலைகள் இன்று (புதன்கிழமை) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட உள்ளன. அதன்படி ▶️கொடிவேரி ▶️ புஞ்சைபுளியம்பட்டி ▶️ கள்ளிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஆற்றில் நீர் வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் மிகுந்த கவனத்துடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறித்தியுள்ளார்.(SHARE பண்ணுங்க)