News January 18, 2026

செங்கையில் இனி வீட்டு வரி செலுத்துவது ஈஸி!

image

செங்கல்பட்டு மக்களே! வீட்டு வரி செலுத்தவோ (அ) ரசீது பெறவோ அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக தமிழக அரசு புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. <>இந்த இணையதளம் <<>>மூலம் நீங்கள் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி ஆகியவற்றை செலுத்தலாம். மேலும், ரசீதையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் செய்யவும்.

Similar News

News February 11, 2026

பல்லாவரம்: பாலியல் சீண்டல் வழக்கில் ஒருவர் கைது

image

பல்லாவரத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் ஒரு காயலான் கடையில் வேலை செய்யும் நபருடன் பழகி வந்துள்ளார். இந்தப் பழக்கம் அதிகமாகி, அந்த நபர், சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த சிறுமியின் தந்தை, பல்லாவரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் அனகாபுத்துாரை சேர்ந்த டோனி (எ) மார்க்கஸ் (20) என்பவரை, போக்சோவில் நேற்று கைது செய்தனர்.

News February 11, 2026

செங்கல்பட்டு: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

image

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <>கிளிக் <<>>செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

News February 11, 2026

செங்கல்பட்டு: ஒண்டர்லா சென்றவர்கள் துடிதுடித்து பலி!

image

வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் பரத் (25). இவர், தன் தோழியான ஆவடியைச் சேர்ந்த சுவேதா (25) என்பவருடன், நேற்று பைக்கில் ஒண்டர்லா சென்று கொண்டிருந்தனர். கீழ்கல்வாய் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சாலை வளைவு பகுதியில் சென்றபோது, நெல்லிக்குப்பத்தில் இருந்து கூடுவாஞ்சேரி நோக்கி வந்த லாரி, பைக் மீது மோதி கோரவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

error: Content is protected !!