News January 18, 2026
வாசிப்பு மூலம் அறிவுத் தீ பரவ வேண்டும்: CM ஸ்டாலின்

கலைவாணர் அரங்கில் நடைபெறும் பன்னாட்டு புத்தகத் திருவிழா நிறைவு விழாவில், CM ஸ்டாலின் கலந்துகொண்டு மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டார். மேலும், வாசிப்பு மூலம் அறிவுத் தீ வீடுகள்தோறும் பரவ வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அறிவு பரிமாற்ற நிகழ்வாகவே பன்னாட்டு புத்தக கண்காட்சி நடைபெறுவதாகவும், தொழில் முதலீட்டுக்கு மட்டுமல்ல, அறிவை பகிர்ந்து கொள்ளவும் TN சிறந்த மாநிலமாகும் என்றும் குறிப்பிட்டார்.
Similar News
News February 12, 2026
ராகுலுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்: கிரண் ரிஜிஜு

பட்ஜெட் விவாதத்தில் ராகுல் உருப்படியான எந்த கருத்துகளையும் முன்வைக்கவில்லை என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விமர்சித்துள்ளார். இந்தியா மற்றும் இந்தியர்களின் நலன்களை பிரதமர் விற்றுவிட்டார் என உள்நோக்கத்துடன் பொய் கூறிய ராகுல், மத்திய அமைச்சர் பதில் அளித்ததை கூட கேட்காமல் அவையை விட்டு ஓடி விட்டார். இது மரபு இல்லை எனக் கூறிய ரிஜிஜு, ராகுலுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்புவோம் என்றார்.
News February 12, 2026
தேமுதிகவுடன் கூட்டணி பேச்சா? நயினார் ரியாக்ஷன்

தேமுதிகவுடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக திண்டுக்கல் சீனிவாசன் நேற்று தெரிவித்திருந்தார். இதுகுறித்த கேள்விக்கு, இதுவரையிலும் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று நயினார் பதிலளித்துள்ளார். சுதீஷ் தன்னுடைய நல்ல நண்பர், அதன் அடிப்படையில் பேசினேன், கூட்டணி தொடர்பாக பேசவில்லை எனக் கூறிய அவர், PM மோடி மார்ச் 1-ல் வருகிறார், அதற்குள் நல்லது நடக்கலாம் என்று சூசகமாக தெரிவித்துள்ளார்.
News February 12, 2026
ஜெயகாந்தனின் பொன்மொழிகள்

▶வாழ்க்கை அவ்வளவு வசதியாக நமக்குப் பிடித்தமாதிரி பிடித்த இடத்திலே போய் நின்று கொள்வதில்லை. ▶உண்மைகள் ஒன்றும் அவ்வளவு முக்கியமில்லை. ஒரு நல்ல நம்பிக்கையைச் சிதைக்காமலிருப்பதே மிகவும் முக்கியம் ▶சுயவிமர்சனம் உடையோரை, பிற விமரிசனங்கள் பாதிப்பதில்லை. ▶வாழ்க்கை சொர்க்கமா ஆகறதுக்குப் பணம் மட்டும் காரணமில்லேதான், ஆனா நரகமா வாழ்க்கை ஆகறதுக்குப் பணம் இல்லேங்கற ஒரே காரணம் போதும்.


