News January 18, 2026
கிருஷ்ணகிரி: சீட்டு மோசடியில் காசு போச்சா? கவலை வேண்டாம்!

கிருஷ்ணகிரி மக்களே, சீட்டு நடத்தி ஏமாற்றுபவர்களிடம் பணத்தை இழந்தால், உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது மாவட்ட ஆட்சியரிடமோ ஆதாரங்களுடன் மனு அளிக்கலாம். இழந்த தொகை மற்றும் ஏமாற்றப்பட்ட விதம் குறித்துப் புகாரில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். சட்ட ரீதியான தீர்வுகளுக்கு வழக்கறிஞரை அணுகுவது சிறந்தது. இது குறித்த விழிப்புணர்வை மற்றவர்களுக்கும் பகிருங்கள்!
Similar News
News February 2, 2026
கிருஷ்ணகிரி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

கிருஷ்ணகிரியில் 2025–2026 ஆம் ஆண்டிற்கான தொழிற்பயிற்சியாளர் (Trade Apprentice) சேர்க்கை முகாம் பிப்.06 நடைபெறுகிறது. ஓசூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் முகாமில் 50க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 10, 12 ஆம் வகுப்பு மற்றும் ITI தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு இந்த எண்ணில் 978797022 அழைக்கவும்
News February 2, 2026
கிருஷ்ணகிரி: கடைகளில் வாங்கிய பொருட்கள் சரியில்லையா?

சில சமயம் நாம் கடைகளில் வாங்கும் பொருட்கள் தரமற்றோ, பழைய பொருட்களாகவோ வரலாம். இதை கடை ஓனர் மாற்ற மறுத்தாலோ (அ) பணத்தைத் தராவிட்டாலோ நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் புகார் செய்யலாம். வாங்கிய பொருள் 15 நாட்களுக்குள் சேதாரம் இல்லாமல், வாங்கிய நிலையில் இருந்தால், அதை மாற்ற, பணத்தைத் திரும்பப் பெற உரிமை உண்டு. கிருஷ்ணகிரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை (04343234677) தொடர்பு கொள்ளலாம். ஷேர்
News February 2, 2026
கிருஷ்ணகிரி: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

கிருஷ்ணகிரி மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின்<


