News January 18, 2026

நெல்லை: இளைஞருக்கு அரிவாள் வெட்டு!

image

நெல்லை மீனாட்சிபுரத்தை சேர்ந்த ஹரி (18) தனது நண்பர் பாலாஜியை சந்திக்க சி.என் கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது பாலாஜி, டவுனை சேர்ந்த பாஞ்சாலராஜன் என்பவரின் மாமியாரிடம் தான் கொடுத்த கடனை கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பாஞ்சாலராஜன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஹரியை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்தவெள்ளத்தில் ஹரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் போலீசார் பாஞ்சாலராஜனை கைது செய்தனர்.

Similar News

News February 7, 2026

நெல்லை: தளபதி சமுத்திரம் குளத்தில் சடலம் மீட்பு

image

திருநெல்வேலி மாவட்டம், தளபதி சமுத்திரம் கீழூர் தெப்பக்குளத்தில் இன்று இரவு ஒருவர் விழுந்து விட்டதாக வந்த தகவலை அடுத்து நாங்குநேரி நிலைய தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று அந்த நபரை சடலமாக மீட்டனர். விசாரணையில் இறந்த நபர் ஆறுமுகம்(65) என்பது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News February 7, 2026

நெல்லையில் காவலரை தாக்கிய கைதி

image

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறையில் சிறைக் காவலராக பணி புரியும் சாம்பிரைட் என்பவரை தண்டனை கைதியான தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த கணபதி மகன் முத்துராமலிங்கம் (50) என்பவர் தாக்கி பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார். சிறை அதிகாரி முனியாண்டி கொடுத்த புகாரின் பேரில் பெருமாள்புரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

News February 7, 2026

நெல்லை: 9ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக பலி

image

வள்ளியூர் நான்கு வழிச்சாலையில் தூத்துக்குடி டவுண் தனியார் பள்ளியில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்று விட்டு நேற்றிரவு திரும்பிக் கொண்டிருந்தபோது பேருந்தின் பின் கதவு எதிர்பாராத விதமாக திறந்தது. படிக்கட்டு வழியாக 9ம் வகுப்பு மாணவன் நவீன் குமார் என்பவர் கீழே விழுந்ததில் பின்னால் இருந்து வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வள்ளியூர் போலீஸ் விசாரணை.

error: Content is protected !!