News January 18, 2026
கடலூர்: மனைவி திட்டியதால் கணவர் தற்கொலை

காடாம்புலியூர் அடுத்த கீழ் மாம்பட்டை சேர்ந்தவர் தொழிலாளி வெங்கடேசன்(45). இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் அவரது மனைவி சாந்தி(30) வெங்கடேசனை கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த வெங்கடேசன் நேற்று தனது வீட்டில் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News January 24, 2026
கடலூர்: உங்க பணத்தை பாதுகாக்க இத பண்ணுங்க!

கடலூர் மக்களே.. உங்கள் Gpay, phonepe, paytm போன்றவற்றில் தானாக பணம் போகிறதா? அதனை தடுக்க அருமையான வழி. அதற்கு <
News January 24, 2026
கடலூர்: தீக்குளித்து முதாட்டி பலி

அண்ணாகிராமம் அடுத்த பத்திரக்கோட்டை அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ராசாத்தி (68). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது சேலையில் தீ வைத்து கொண்டதாக கூறப்படுகிறது. அதனையடுத்து தீக்காயத்துடன் ஆபத்தான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News January 24, 2026
கடலூர் ஆட்சியrரின் முக்கிய அறிவிப்பு

குடியரசு தின விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் வரும் ஜன.26-ம் தேதி அன்று காலை 11 மணி அளவில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. அதனால் இந்த கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் இடம், நேரம் குறித்து முன்கூட்டியே ஊராட்சிப் பொதுமக்களுக்கு தனி அலுவலர்கள் தெரியப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


