News January 18, 2026

தருமபுரி: பொம்மிடி அருகே மோதல் -10 பேர் மீது வழக்கு!

image

தருமபுரி மாவட்டம், வேப்பமரத்தூர் பொங்கல் திருவிழாவில் பொம்மிடி-தொப்பூர் சாலையில் நடன நிகழ்ச்சி நடந்தது. அப்போது நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு அவ்வழியே பைக்கில் வந்த அழகேசன்(50) என்பவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இரு தரப்பின் புகார் படி10 பேர் மீது பொம்மிடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

Similar News

News February 11, 2026

தருமபுரியில் கொடூரத்தின் உச்சம்!

image

எஸ்.வி. சாலையில் உள்ள சுப்பிரமணிய சாமி கோயில் பூசாரி ரமேஷ் பாபு (56). இவர் தனது வீட்டில் வேலை செய்த 9-ம் வகுப்பு மாணவியுடன் 3 மாதங்களாக தகாத உறவில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வயிற்று வலியால் துடித்த மாணவியை அரசு மருத்துவர்கள் பரிசோதித்ததில் 2 மாத சிசு வயிற்றிலேயே இறந்தது தெரிந்தது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பூசாரி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

News February 11, 2026

தருமபுரி: தூக்கில் தொங்கிய விவசாயி!

image

கிருஷ்ணாபுரம் அடுத்த ரங்கன் கொட்டாய்யை சேர்ந்த விவசாயி சஞ்சீவன் (34). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்ப தகராறு காரணமாக மனைவி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் சஞ்சீவன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

News February 11, 2026

தருமபுரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (பிப்-10) இரவு முதல் இன்று காலை (பிப்-11) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!