News May 6, 2024
அனைத்து மாவட்டங்களுமே 90% தேர்ச்சி

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை இன்று வெளியிட்டுள்ளது. கடந்தாண்டு பல மாவட்டங்களில் மாணவர்கள் 90%-க்கும் கீழ் தேர்ச்சியான நிலையில், இம்முறை அனைத்து மாவட்டங்களுமே 90% மேல் தேர்ச்சி அடைந்துள்ளனர். 90.47% பெற்று திருவண்ணாமலை மாவட்டம் குறைந்தபட்ச தேர்ச்சி விகிதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. கடந்தாண்டு ராணிப்பேட்டை மாவட்டம் 87.30% பெற்றதே குறைந்த தேர்ச்சி விகிதமாகும்.
Similar News
News August 20, 2025
அக்னி-5 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை வெற்றி

இண்டர்மீடியட் ரேஞ்ச் பாலிஸ்டிக் ஏவுகணை ‘அக்னி-5’ சோதனை வெற்றி அடைந்ததாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. ஒடிஷாவின் சந்திப்பூர் சோதனைக் களத்தில் இச்சோதனை நடந்தது. செயல்பாட்டு, தொழில்நுட்ப ரீதியாக அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக இச்சோதனை இருந்தது. அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய ஏவுகணை இந்திய ராணுவத்தின் பலத்தை மேலும் கூட்டும் என பாதுகாப்பு வல்லுநர்கள் கூறுகின்றனர்.
News August 20, 2025
புதிய சட்ட மசோதாவுக்கு ஆதரவும் எதிர்ப்பும்

30 நாள்களுக்கு மேல் சிறையில் இருந்தால், பதவிநீக்கம் செய்யும் ‘<<17462799>>PM, CM பதவிபறிப்பு மசோதா<<>>’வுக்கு ஆதரவும் எதிர்ப்பும் தீவிரமாகியுள்ளது. இந்த சட்டம் குற்றம் செய்வதிலிருந்து அரசியல்வாதிகளை தடுக்க உதவும் என்கின்றனர் ஆதரிப்போர். ஆனால், குற்றம் செய்யாமல் (அ) பொய்வழக்கில் சிறைசெல்ல நேரும் அரசியல் தலைவர்களை, பதவியிழக்க செய்ய இது தவறாக பயன்படுத்தப்படும் என்கின்றனர் எதிர்ப்போர். உங்களின் கருத்து என்ன?
News August 20, 2025
தவெக மாநாட்டில் திடீர் மாற்றம்

மதுரை தவெக மாநாட்டு அரங்கில் <<17463695>>100 அடி உயரக் கொடிக்கம்பம் சரிந்து விழுந்த விபத்து<<>> பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் வடு மறைவதற்குள் ராட்சத ஃபோக்கஸ் லைட்டுகள் சரிந்து விழுந்தது. இப்படி அடுத்தடுத்து விபத்துக்கள் நடந்த நிலையில், விஜய் மாநாட்டு அரங்கில் ஏற்பாடுகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்நிலையில், சேதமடைந்த கொடிக்கம்பத்திற்கு மாற்றாக வேறு கொடிக்கம்பம் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.