News January 17, 2026

பாம்பை வைத்து பொங்கல்.. தமிழ்நாட்டில் விநோதம்

image

காஞ்சிபுரம், சாத்தணஞ்சேரியில் இருளர் மக்கள் நல்ல பாம்பை பிடித்து பொங்கல் வைக்கும் பழக்கத்தை கடைப்பிடித்து வருகின்றனர். பொங்கலுக்கு 4 நாள்களுக்கு முன்பே பாம்பை பிடித்து, பானையில் அடைத்து வைத்து அதற்கு பூஜை செய்கின்றனர். பின்னர் காணும் பொங்கல் அன்று கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு பாம்பை எடுத்துச் சென்று, கற்பூர ஆரத்தி காட்டி வீட்டு வாசலில் படம் எடுக்கச் செய்யும் விநோத வழிபாடு நடந்து வருகிறது.

Similar News

News February 19, 2026

பெரும் சிக்கலில் திமுக, அதிமுக.. இதான் பிரச்னை! (1/2)

image

ராஜ்யசபாவில் திமுகவின் 4 MP சீட்களுக்கு தேர்தல் வருகிறது. ஏற்கெனவே திருச்சி சிவாவுக்கு ஒரு சீட் நிச்சயமாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. மீதமிருக்கும் 3-ல் காங்., & விசிக ஒன்றை கேட்கிறதாம். அத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இருப்பதாக கூறப்படும் தேமுதிகவும், ராமதாஸும் தலா 1 சீட் கேட்கிறார்களாம். இதனால் திமுக திக்குமுக்காடி போயிருப்பதாக பேசப்படுகிறது. அதிமுக செய்திக்கு <<19180714>>CLICK<<>>.

News February 19, 2026

பெரும் சிக்கலில் திமுக, அதிமுக.. இதான் பிரச்னை! (2/2)

image

அதிமுகவில் 2 ராஜ்யசபா சீட்டுக்கு தேர்தல் நடக்கவுள்ளது. அந்த இரண்டே சீட்டுக்கு அக்கட்சியில் கடும் போட்டி நடக்கிறதாம். ஏற்கெனவே 1 MP சீட் அன்புமணிக்கு உறுதியாகிவிட்டது. மீதமிருக்கும் ஒரே சீட்டுக்கு அத்தனை நெருக்கடி. ஒரு பக்கம் GK வாசன், இன்னொரு பக்கம் தம்பிதுரை நிற்கிறார்களாம். அத்துடன் அதிமுகவுக்கும் 1 MP சீட் வேண்டும் என நிர்வாகிகள் கேட்பதால் இடியாப்ப சிக்கலில் EPS இருப்பதாக பேசப்படுகிறது.

News February 19, 2026

என்னது பல் தேய்ச்சிட்டு வாய் கொப்பளிக்க கூடாதா?

image

பல் துலக்கிய பின் வாயை கொப்பளித்து, துப்புவது வழக்கம். ஆனால், இதை நீங்கள் தவறாக செய்கிறீர்கள் என்று சொன்னால் நம்பமுடிகிறதா? ஏனென்றால், பற்பசையில் உள்ள ஃப்ளோரைடு வேலை செய்ய சிறிது நேரம் தேவைப்படுகிறதாம். ஆனால், நாம் அதற்கு முன்பாகவே, பேஸ்ட் நுரையை துப்பிவிடுகிறோம் என டாக்டர்கள் கூறுகிறார்கள். பல் துலக்கிய 20-30 நிமிடங்கள் வரை காத்திருக்குமாறும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர். SHARE.

error: Content is protected !!