News January 17, 2026
மத்திய அரசுக்கு இறுதி வாய்ப்பு: SC அதிரடி!

அனைவருக்கும் கல்வி திட்டத்தில் TN-க்கு வழங்க வேண்டிய ₹3,500 கோடி நிதியை விடுவிக்க கோரி, TN அரசு SC-ல் வழக்கு தொடர்ந்திருந்தது. இதன் வழக்கு விசாரணையின்போது, மத்திய அரசின் நடவடிக்கையால் 45 லட்சம் மாணவர்கள், 2 லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக TN அரசு தரப்பில் வாதம் செய்யப்பட்டது. இதையடுத்து, வழக்கில் 4 வாரத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய இறுதி வாய்ப்பு வழங்கி SC உத்தரவிட்டுள்ளது.
Similar News
News February 5, 2026
4 வருஷமா டார்ச்சர் பண்றாங்க.. நடிகை ரவீனா ரவி வேதனை!

கடந்த 4 ஆண்டுகளாக சபரீஷ் மற்றும் அவரது சகோதரர் தன்னை தொந்தரவு செய்வதாக நடிகை ரவீனா ரவி பதிவிட்டுள்ளார். அவர்கள் அனுப்பிய அநாகரீகமாக மெசேஜ்ஜின் Screenshot-ஐ பதிவிட்டு, தன்னை மட்டுமின்றி வேறு சில நடிகைகளையும் இவர்கள் தொந்தரவு செய்வதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், பெண்களுக்கு பாதுகாப்பான நகரமான சென்னையில் இருக்கும் இவர்கள் மீது போலீஸ் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
News February 5, 2026
விஜய் என்றால் அனைவருக்கும் பயம்: செங்கோட்டையன்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என மக்கள் நினைப்பதால்தான் தவெக உருவாக்கப்பட்டு வீரநடை போட்டு வருகிறது என KAS கூறியுள்ளார். விஜய்யிடம் இஞ்சினே இல்லை என அண்ணாமலை பேசியதற்கு பதிலளித்த அவர், விஜய்யை பார்த்து எல்லாருக்கும் பயம் வந்துவிட்டதால்தான் இப்படிபட்ட விமர்சனம் வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், அதே பயத்தில்தான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தேர்தல் அறிக்கையை EPS வெளியிடுவதாகவும் பேசியுள்ளார்.
News February 5, 2026
BREAKING: தமிழகத்தில் பறவை காய்ச்சலா? CLARITY

சென்னையில் கடந்த சில நாள்களாக காகங்கள் தொடர்ச்சியாக உயிரிழப்பது அதிகரித்துள்ளது. இது H5N1 வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு என உறுதிப்படுத்தியுள்ள கால்நடைத்துறை, இறந்த காகங்களை கையால் தொட வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், அவற்றை 8 முதல் 10 அடி ஆழத்தில் புதைக்க அல்லது எரிக்க உத்தரவிட்டுள்ளது. இதுவரை, பறவை காய்ச்சலால் மனிதர்கள் பாதிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.


