News January 17, 2026
தஞ்சை: கள்ளச்சந்தையில் மது விற்றவர் கைது

தமிழகத்தில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நேற்று (ஜன.16) மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதனை பயன்படுத்தி கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த சிலம்பரசன் என்பவரை நேற்று போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 481 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Similar News
News March 14, 2026
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; இளைஞர் கைது

பாபநாசம் பகுதியை சேர்ந்தவர் பாபு. கொத்தனாரான இவர் வீட்டு வாசலில் கேரம்போர்டு விளையாடிக் கொண்டிருந்த 4ம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமிக்கு பெரிய கேரம் போர்டு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பாபநாசம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், பாபுவை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
News March 14, 2026
தஞ்சாவூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News March 14, 2026
அனைத்து தபால் நிலையங்களிலும் ஆதார் சிறப்பு முகாம்!

கும்பகோணம் தபால் கோட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் ஆதார் சேவை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற மார்ச்.30ஆம் தேதி வரை கும்பகோணம் தலைமை நிலையம், மேலக்காவேரி தலைமை நிலையம், கும்பகோணம் கோட்டத்தில் சுவாமிமலை, ஆடுதுறை, நாச்சியார்கோவில், பட்டீஸ்வரம், பந்தநல்லூர் ஆகிய துணை தபால் நிலையங்களிலும் ஆதார் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.


