News January 17, 2026
குமரி: காதல் தோல்வியால் இளைஞர் விபரீத முடிவு…

தக்கலை அருகே கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (24). பட்டதாரியான இவர் கட்டிட வேலை செய்து வந்தார். இவர் கடந்த சில ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண் திடீரென ஸ்ரீகாந்திடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் மன வேதனையில் இருந்த ஸ்ரீகாந்த் நேற்று முன் தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 6, 2026
குமரி: கஞ்சா வழக்கில் வாலிபர் கைது

கருங்கல் பகுதியை சேர்ந்தவர் ஆட்லின் பிரிட்ஜோ. இவரை பைக்கில் வந்த கஞ்சா போதை கும்பல் வீடு புகுந்து கத்தியால் குத்தியுள்ளது. மேலும், அந்த கும்பல் பொதுமக்களை அரிவாள் காட்டி மிரட்டியும் உள்ளது. இதுகுறித்த புகாரில் அஸ்வின் என்ற வாலிபர் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர் விசாரணையில் இவர் கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ரீல்ஸ் வெளியிட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
News February 6, 2026
குமரி: ரூ.50,500 சம்பளத்தில் மத்திய அரசு வேலை.. APPLY NOW!

மத்திய அரசின் BSNL நிறுவனத்தில் 120 காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பம் நேற்று (பிப்.5) முதல் தொடங்கி உள்ளது. பொறியியல் டிகிரி முடித்த 21 – 30 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதில் ரூ.24,900 முதல் ரூ.50,500 வரை சம்பளம் வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள் இங்கே <
News February 6, 2026
குமரி: 8-ம் வகுப்பு மாணவி தற்கொலை

பேயன்குழியை சேர்ந்தவர் சஜினி. இவரது மகள் அக்சயா (13) 8-ம் வகுப்பு படித்து வருகிறார். பிப்.4 அன்று அக்சயாவுக்கும், அவரது தங்கைக்கும் வாய் தகராறு ஏற்பட்ட நிலையில் தங்கையின் தலை முடியின் சிறுபாகத்தை அக்சயா வெட்டியதாக கூறப்படுகிறது. தங்கை அழுததால் தாய் தண்டிப்பார் என பயந்த அக்சயா வீட்டு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குலசேகரம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை.


