News January 17, 2026
திருச்சி: திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை

சோமரசம்பேட்டை அடுத்த தேனாச்சிகாட்டை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (24). இவரது மனைவி பிரபாவதி (21). இருவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக வீட்டில் பொங்கல் வைப்பது தொடர்பாக கணவன் மனைவியிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் கோவிந்தராஜ் தனது மனைவியை கடுமையாக திட்டியதில் மனமுடைந்த அவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News February 5, 2026
திருச்சி மாவட்டத்தில் 1.22 லட்சம் மனுக்களுக்கு தீர்வு

திருச்சி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் 2025 ஜூலை 15-ம் தேதி தொடங்கி, நவம்பர் 4-ம் தேதி வரை நகர்புறங்களில் 126 முகாம்கள், ஊரக பகுதிகளில் 225 முகாம்கள் என மொத்தம் 351 முகாம்கள் நடத்தப்பட்டன. இம்முகாம்களில், அனைத்து அரசுத்துறைகள் சார்பில் மொத்தம், 1,45,285 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 1,22, 298 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளதாக கலெக்டர் சரவணன் அறிவித்துள்ளார்.
News February 5, 2026
திருச்சி: இங்கெல்லாம் இன்று மின்தடை!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் , பிச்சாண்டார்கோவில், தென்னூர், வரகனேரி மற்றும் திருவானைக்காவல் துணைமின் நிலையங்களில் இன்று (பிப்.5) மாதந்தர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக அந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் இன்று காலை 9:45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்ததகவலை SHARE பண்ணுங்க!
News February 5, 2026
திருச்சி: குரூப்-2 தேர்வு குறித்த அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப்-2 தேர்வு வரும் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வினை திருச்சி மாவட்டத்தில் ஒரு தேர்வு மையத்தில் 724 தேர் எழுத உள்ளனர். தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு சென்று வர சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தேர்வர்கள் செல்போன், ப்ளூடூத் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை எடுத்து வர அனுமதி இல்லை என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


