News January 17, 2026
தி.மலை: குளிக்க சென்றவர் பிணமாக வந்த சோகம்!

ஆரணி, குன்னத்தூரை சேர்ந்தவர் தமிம் அன்சாரி (56). கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை கிணற்றுக்கு குளிக்க சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் மேலே வராததால், அங்கிருந்தவர்கள் ஊருக்குள் தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலர் ஏழுமலை தலைமையில் நேற்று முன்தினம் இரவு முதல் அவரைத் தேடிய நிலையில், நேற்று காலை 10 மணியளவில் பிணமாக தமீம் அன்சாரி உடலை மீட்டனர்.
Similar News
News February 12, 2026
திருவண்ணாமலை அரசு கல்லூரியில் நாளை பட்டமளிப்பு விழா!

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலை மற்றும் அறிவியல் கலைக்கல்லூரியில் நாளை பிப்ரவரி 13 மற்றும் பிப்ரவரி 14 ஆகிய இரு நாட்கள் பட்டமளிப்பு விழா நடைபெற இருக்கிறது. ஆகையால் பிப்ரவரி 13 மற்றும் பிப்ரவரி 14 இரண்டு நாளுமே இளங்கலை மற்றும் முதுகலை (முதல் மற்றும் இரண்டாம் சுழற்சி) மாணவர்களுக்கு வகுப்புகள் ரத்து செய்யப்படுகிறது. என கல்லூரியின் முதல்வர் ரேவதி அம்மையார் சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
News February 12, 2026
தி.மலை: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.
News February 12, 2026
ஆட்சியர் அலுவலகதில் 2030 என் ஊர் என் கனவு’திட்டம்

ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விஷன் 2030 ‘என் ஊர் என் கனவு’ திட்டத்தின் கீழ் கருத்து கேட்பு கூட்டம் ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகி எ.வ.வே.கம்பன், செங்கம் எம்எல்ஏ கிரி, மேயர் நிர்மலா வேல்மாறன், கார்த்திக் வேல்மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


