News January 16, 2026
ஓய்வுபெற்ற ஊழியர்களிடம் பகீர் மோசடி!

இந்திய ரயில்வேயில் ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு மரியாதை அளிக்கும் விதமாக வழங்கப்பட்ட தங்க முலாம் பூசிய வெள்ளி நாணயத்தில் அதிர்ச்சியூட்டும் மோசடி நடந்துள்ளது. உண்மையில் அவை செம்பினால் செய்யப்பட்ட போலி நாணயங்கள் என்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக Ex. ரயில்வே ஊழியர் அளித்த புகாரின் பேரில், FIR பதியப்பட்டுள்ளது. சுமார் ₹2,000 மதிப்புள்ள நாணயத்தில், வெறும் 0.23% மட்டுமே இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
Similar News
News February 6, 2026
CINEMA 360°: விக்ரமின் ஜோடியாக சுருதிஹாசன்

*விமலின் ‘மகாசேனா’ இன்று முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது *சிரஞ்சீவியின் ‘மன சங்கர வர பிரசாத் காரு’ 25 நாள்களில் 375 கோடி வசூலித்துள்ளது *ரவி மோகனின் ‘கராத்தே பாபு’ பட ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது *’சியான் 63′ படத்தில் சுருதி ஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார் *கென் கருணாஸ் நடிக்கும் ‘யூத்’ படத்தின் முதல் பாடல் நாளை ரிலீசாகும் என அறிவிப்பு
News February 6, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (பிப்.6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News February 6, 2026
விஜய் வீட்டை விட்டு வெளியே வர முடியாது: ஆர்.பி. உதயகுமார்

கரூர் சம்பவத்தின் போது தன்னை பார்க்க வந்தவர்களையே காப்பாற்றாமல் ஓடிய விஜய், TN-ஐ எப்படி காப்பாற்றுவார் என ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். தவெகவை விட கடுமையான விமர்சனங்களை முன்வைக்க தங்களுக்கு தெரியும் என்றும், அதிமுக விமர்சித்தால் வீட்டை விட்டு கூட விஜய்யால் வெளியே வர முடியாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், விஜய்க்கு அடிப்படை மனிதநேயமே இல்லை எனவும் கடுமையாக சாடியுள்ளார்.


