News January 16, 2026
காற்று மாசால் தலைநகரில் 9,000 பேர் பலியா?

தலைநகரில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், 2024-ல் சுவாச நோய்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,211-ஆக உயர்ந்துள்ளதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது. இது 2023-இல் பதிவான 8,801 உயிரிழப்புகளை விட அதிகம். ஆஸ்துமா, நிமோனியா போன்ற சுவாசக் கோளாறுகளே முக்கிய காரணமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2024-ஐ விட 2025-ல் உயிரிழப்பு மேலும் அதிகரித்திருக்கும் என அஞ்சப்படுகிறது.
Similar News
News February 3, 2026
திமுக ஆட்சியில் ரவுடிசம் அதிகரிப்பு: பாஜக

திமுகவின் ஆட்சியில் TN-ல் ரவுடியிசமும், வன்முறைகளும் அதிகரித்துவிட்டதாக வானதி ஸ்ரீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார். தனது X பதிவில், தேனி மற்றும் ஓசூரில் பட்டப்பகலில் நடந்த குற்றச் சம்பவங்களை சுட்டிக்காட்டி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக சாடியுள்ளார். மேலும், சர்வசாதாரணமாக கொலைகள் நடக்கும் அளவிற்கு தமிழகத்தை மாற்றியது தான் திராவிட மாடல் ஆட்சியா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
News February 3, 2026
JEE 2-ம் கட்ட தேர்வு.. மாணவர்கள் கவனத்திற்கு

பொறியியல் படிப்புகளுக்கான JEE 2-ம் கட்ட தேர்வு ஏப்.1 தொடங்கி ஏப்.9 வரை நடைபெறவுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் தற்போது தொடங்கியுள்ள நிலையில், விருப்பமுள்ள மாணவர்கள் பிப்.25-க்குள் jeemain.nta.nic.in தளத்தில் விண்ணப்பிக்கலாம் தேசிய தேர்வு முகமை என தெரிவித்துள்ளது. JEE மெயின் தேர்வை சுமார் 12 லட்சம் பேர் எழுதிய நிலையில், வரும் பிப்.12-ல் முடிவுகள் வெளியாகின்றன.
News February 3, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஊக்கமுடைமை ▶குறள் எண்: 600 ▶குறள்:
உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு.
▶பொருள்: மனத்தில் உறுதியான ஊக்கமில்லாதவர்கள் உருவத்தில் மனிதர்களாகக் காணப்பட்டாலும் மரங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு இல்லை.


