News January 16, 2026

கள்ளக்குறிச்சி: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் உடனே SHARE பண்ணுங்க!

Similar News

News February 2, 2026

புதிய பேருந்து நிலையம் திறக்க தடை இல்லை!

image

கள்ளக்குறிச்சி புறவழிச் சாலையில் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டிருந்த புதிய புறநகர் பேருந்து நிலைய கட்டுமானங்களை எதிர்த்து அதிமுக நிர்வாகி குமரேசன் என்பவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. கள்ளக்குறிச்சி புதிய புறநகர் பேருந்து நிலையத்தை திறக்க எந்த விதமான தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

News February 2, 2026

கள்ளக்குறிச்சியில் நிலம் வாங்கினால் ரூ.5 லட்சம் மானியம்!

image

பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் வகையில் தாட்கோ மூலமாக ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை மானியம் பெறலாம். அதேபோல், முத்திரைத்தாள், பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். இதில் பயனடைய விரும்பும் பெண்கள் இங்கு<> க்ளிக்<<>> செய்து மேலும் விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News February 2, 2026

நாளை புறநகர் பேருந்து நிலையத்தை திறந்து வைக்கும் அமைச்சர்

image

கள்ளக்குறிச்சி புறவழிச்சாலை அருகே புதிதாக புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. நாளை பிப்.3 ஆம் தேதி மாலை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வவேலு மற்றும் நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் இணைந்து திறந்து வைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

error: Content is protected !!