News January 16, 2026
நெல்லையில் ஒருவர் வெட்டிக் கொலை!

நெல்லை மாவட்டம், பாப்பாக்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட அடைச்சாணி பகுதியை சேர்ந்த சரவணன் (47) என்பவர் இன்று (ஜன 16) காலை வாய்க்கால் பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டு நிலையில் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பாப்பாக்குடி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 5, 2026
நெல்லை : உங்க வீட்ல VOLTAGE பிரச்சனயா?

நெல்லை மக்களே உங்க வீட்ல கரண்ட் கம்மியா வருதா? இதை சரி செய்ய வழி இருக்கு
1. வோல்டேஜ் பிரச்சனைய போட்டோ (அ) வீடியோ எடுங்க.
2. 94458 50811 (அ) 9443111912 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்புங்க.
3. 94987 94987 எண்ணுக்கு அழைத்து புகார் தெரிவிக்கலாம்..
இந்த தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க..
News February 5, 2026
நெல்லை: பெண்ணுக்கு பாலியல் தொல்லை

பாளையங்கோட்டை கோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கலீல் ரகுமான் (51). அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் மாநகர காவல் துணை ஆணையர் வினோத் சாந்தாராம் பரிந்துரையின்படி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவை பிறப்பித்தார். அதன்படி, கலீல் ரகுமான் நேற்று (பிப் 4) குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
News February 5, 2026
இரவு காவல் உதவிக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின்படி இன்று பிப். 4 ஆம் தேதி திங்கள் கிழமை இரவு முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லை மாநகரப் பகுதியில் போலீஸ் சரகம் வாரியாக காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் விபரத்தை மாநகர காவல் துறை இன்று இரவு வெளியிட்டுள்ளது. அவரது கைபேசி எண் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் உதவிக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம்.


