News January 16, 2026

கொடைக்கானலில் தண்ணீர் டீசலா? உஷார் மக்களே

image

கொடைக்கானல்: பண்ணைக்காடு பேரூராட்சி ஊத்து பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்பிய சிறிது நேரத்திலேயே வாகனங்கள் பழுதாகி நின்றன. மெக்கானிக் மூலம் பரிசோதித்தபோது, டீசலில் அதிகளவு தண்ணீர் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. அடிக்கடி இதுபோன்று வாகனங்கள் பழுதாகி நிற்பதால், பெரும் நஷ்டம் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவிப்பதோடு, உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News January 27, 2026

திண்டுக்கல்: ரூ.3 லட்சம் கடன் வேண்டுமா? APPLY NOW

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். ( SHARE பண்ணுங்க)

News January 27, 2026

திண்டுக்கல்லில் 3 பேர் அதிரடி கைது

image

திண்டுக்கல், பாலமரத்துப்பட்டியைச் சேர்ந்த சின்னையா என்பவரின் மனைவி சுப்புலட்சுமி மற்றும் அவரது மகள்கள் பஞ்சவர்ணம், கருத்தம்மாள் ஆகிய மூவரையும், கடந்த 24-ம் தேதி 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அதே ஊரைச் சேர்ந்த விஜய், ஆறுமுகம், முருகேசன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மணிராஜன் என்பவரை தேடி வருகின்றனர்.

News January 27, 2026

திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில், நேற்று (ஜனவரி 26) இரவு 10 மணி முதல் இன்று 27-ஆம் தேதி காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர நிலை ஏற்பட்டால், உட்கோட்ட அதிகாரியை நேரடியாக தொலைபேசி மூலம் அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் இருக்கும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!