News January 16, 2026
ஈரானில் 12,000 பேர் பலி.. நாடே சோகத்தில் ஆழ்ந்தது!

ஈரானில் நடைபெற்ற போராட்டங்களில் 12,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மனதை உலுக்கும் வகையில் நூற்றுக்கணக்கான பிணங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ள போட்டோக்கள் வெளியாகி, பார்ப்போரை பதைபதைக்க வைத்துள்ளது. உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உடல்களை வாங்க வேண்டும் அல்லது வெகுஜன புதைகுழியில் புதைக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
Similar News
News February 2, 2026
தோல்வி பயத்தில் ஸ்டாலின்: நயினார்

தோல்வி பயத்தில் இருக்கும் <<19023321>>ஸ்டாலின் <<>>அவர்களே, மாநிலத்திற்கு பட்ஜெட் போடச் சொல்லி 5 வருட ஆட்சியை வழங்கிய மக்களுக்கு, நீங்கள் அல்வா கிண்டிக் கொடுத்த கரண்டி அடிப்பிடித்துக் கிடக்கிறது என நயினார் பதிலடி கொடுத்துள்ளார். கவர்ச்சிகர அறிவிப்பு மூலம் ஆட்சியை பிடித்து மக்களை ஏமாற்றும் வழக்கம் உங்களுடையது(திமுக); அது NDA அரசின் பாணி அல்ல எனக் குறிப்பிட்ட அவர், வாழ்க தமிழ்! ஒழிக திமுக! என்று தெரிவித்துள்ளார்.
News February 1, 2026
இந்தியாவின் நாயகன் காலமானார். RIP

வெயில், மழை, பனி என அனைத்தையும் தாங்கிக் கொண்டு மக்களுக்காக எல்லையில் பணியாற்றிய ஒரு நாயகனை தாய்த்திரு நாடு இழந்துள்ளது. ஒடிசாவைச் சேர்ந்த 31 வயதே ஆன ராணுவ வீரர் ஜித்து பெஹெரா, காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது மாரடைப்பால் காலமானார். ஒடிசா CM மோகன் சரண் மாஜி உள்ளிட்டோர் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்தனர். இதனையடுத்து, சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் அந்த வீரனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
News February 1, 2026
குறட்டை விட்டால் மாரடைப்பு வரும்.. உஷார்

தூங்கும்போது மூச்சுப்பாதையில் தசைகள் இடையூறு விளைவிப்பதால் குறட்டை ஏற்படுகிறது. இந்த பிரச்னையை ஸ்லீப் அப்னீயா (sleep apnea) என டாக்டர்கள் கூறுகின்றனர். குறட்டை விடும் பிரச்னையின் காரணமாக ரத்த அழுத்தம் ஏற்படலாம். உடல் பருமன் உள்ளவர்கள் என்றால் சர்க்கரை நோய் பாதிக்கும் அபாயமும் உள்ளது. இதுபோன்ற வாழ்வியல் சார்ந்த பிரச்னைகளால் இதயம் பலவீனமடைதல் & மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாம்.


