News January 16, 2026

ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.80 லட்சம் மோசடி

image

ஸ்ரீவியில் நீதிமன்றத்தில் ஏலம் விடப்படும் வாகனங்களை குறைந்த விலைக்கு எடுத்துத் தருவதாகக் கூறி,கட்டட ஒப்பந்ததாரர் ராமசாமியிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்ததாக முருகேசகண்ணன் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பணத்தை திரும்ப கேட்டபோது வழங்கப்பட்ட காசோலைகள் பணம் இல்லாமல் திரும்பிவிட்டதால், ராமசாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

Similar News

News January 26, 2026

விருதுநகர்: 12th போதும்..அரசு வேலை ரெடி!

image

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வெளியிட்டுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 312
3. வயது: 18 – 40
4. சம்பளம்: ரூ.44,900
5. தகுதி: 12-ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 29.01.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 26, 2026

விருதுநகர்: விபத்தில் தந்தை, மகன் பலி

image

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே தரகனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த அழகுமலை, அவரது மகன் முனுசாமி இருவரும் டூவீலரில் காரியாபட்டி அருகே மதுரை- தூத்துக்குடி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தூத்துக்குடி – மதுரை சென்ற கார் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் கார் ஓட்டுநர் காயமடைந்த நிலையில் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News January 25, 2026

விருதுநகர்: இனி கரெண்ட் பில் தொல்லை இல்லை!

image

விருதுநகர் மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, அதன் பின்னர் உங்கள் வீட்டு மின் நுகர்வு எண்,செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். உங்களது நண்பர்களும் இதில் பயன்பெற SHARE பண்ணுங்க!

error: Content is protected !!