News January 16, 2026

தாம்பரம்: தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!

image

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்கள் வசதிக்காக வரும் ஜன.18-ந்தேதி நெல்லை – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நெல்லையில் இருந்து மதியம் 1:00 மணிக்கு புறப்படும் ரயில் ராஜபாளையம் வழியாக மறுநாள் அதிகாலை 3:00 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க. மற்றவர்களுக்கு பயன்படும்.

Similar News

News February 2, 2026

செங்கல்பட்டு: கொத்து கொத்தாக செத்து கிடந்த நாய்கள்

image

பெருங்களத்தூர் அருகே நெடுங்குன்றம் பகுதியில் வசித்து வந்தவர்கள் பிரியங்கா, நரேஷ் குப்தா. இவர்கள் அங்கு இருந்த நாய்களை உணவளித்து பராமரித்து வந்தனர். இந்நிலையில், இந்த நாயகளால் அக்கம் பக்கத்தினருக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும், வீட்டை காலி செய்யவும் வீட்டு ஓனர் தெரிவித்துள்ளார். வீட்டை காலி செய்த அவர்கள், மீட்டும் அந்த நாய்களை பார்க்க வந்த போது அவைகள் செத்து கிடந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

News February 2, 2026

செங்கல்பட்டு: இன்று முதல் வீட்டிற்கே வந்து சேரும்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் 841 நியாய விலைக் கடைகளில் 32,242 தகுதி வாய்ந்த குடும்ப அட்டைதாரர்கள் பயனடையும் வகையில் வருகின்ற 2,3,4 ஆகிய தேதிகளில் வீடுகளுக்கே சென்று பொருட்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் தாயுமானவர் திட்டத்தின் கீழ் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று பொது விநியோகத் திட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

News February 2, 2026

செங்கல்பட்டு: இன்று இரவு பணி காவலர் விவரம்

image

செங்கல்பட்டு நேற்று ( பிப்-01) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!