News January 16, 2026
நெல்லையில் குவிக்கப்படும் போலீஸார்!

நெல்லை மாவட்டத்தில் இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக சுற்றுலா தலங்கள், நீர்நிலைகளுக்கு அதிகளவில் மக்கள் செல்வார்கள். இதை கருத்தில் கொண்டு மாவட்ட முழுவதும் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரசன்ன குமார் செய்துள்ளார். 40 இருசக்கர வாகனங்கள், 35 நான்கு சக்கர வாகனங்கள் மூலம் போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பில் ஈடுபடுவர்.
Similar News
News February 3, 2026
நெல்லை : இனி டாக்டர் பீஸ் FREE..!

நெல்லை மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை இங்<
News February 3, 2026
நெல்லையில் பெண் தீக்குளித்து தற்கொலை!

நெல்லை மாவட்டம், நாங்குநேரி பகுதியை சேர்ந்த சுப்பம்மாள் (34) இவர் கணவர் சிறையில் உள்ளார். நேற்று காலை வீட்டில் தனியாக இருந்த சுப்பம்மாள் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
News February 3, 2026
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று (பிப்.2] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் அஸ்வந்த் அன்டோ ஆரோக்யராஜ் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.


