News January 15, 2026
தமிழகத்தின் புதிய ஜல்லிக்கட்டு மைதானம்!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில், ₹3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஜல்லிக்கட்டு மைதானத்தை DCM உதயநிதி இன்று திறந்து வைத்தார். அவர் பேசுகையில், திருச்சிக்கு மலைக்கோட்டை, காவிரி ஆறு எப்படி அடையாளமோ, அதே போன்று சூரியூர் ஜல்லிக்கட்டும் ஒரு அடையாளம் என்றவர், இதுவரை மந்தையில், குளத்தில் நடந்த சூரியூர் ஜல்லிக்கட்டு நாளை ஜன.16 முதல் இந்த நிரந்தர அரங்கில் நடைபெறும் என அறிவித்தார்.
Similar News
News April 7, 2026
தமிழன் பிரசன்னா வேட்புமனு ஏற்பதில் குழப்பம்

கொளத்தூரில் போட்டியிடும் திமுக தலைவர் ஸ்டாலினின் வேட்புமனு ஏற்பட்டுள்ளது. அதேபோல், தருமபுரியில் சௌமியா அன்புமணி, சேப்பாக்கத்தில் உதயநிதி, மயிலாப்பூரில் தமிழிசை, காட்பாடியில் துரைமுருகன், தி.நகரில் புஸ்ஸி ஆனந்த், சாத்தூரில் நயினார் ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. ஆனால், எழும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் தமிழன் பிரசன்னா வேட்புமனுவை ஏற்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் சலசலப்பு நிலவி வருகிறது.
News April 7, 2026
வேறொருவருடன் மனைவி.. கோர்ட் அனுமதியால் பரபரப்பு

தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்கிறார், கணவர். இதன் மீதான விசாரணையில், எனக்கு 19; கணவருக்கு 40. என்னால் அவருடன் வாழ முடியாது. நான் விரும்பியவருடனே வாழ விரும்புகிறேன் என மனைவி வாதிடுகிறார். இதனை ஏற்ற ம.பி., HC, விரும்பாத திருமண உறவிலிருந்து வெளியேறி தனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ பெண்ணுக்கும் உரிமை உண்டு என தெரிவித்துள்ளது.
News April 7, 2026
‘மாம்பழம்’ சின்னம்: ஐகோர்ட்டை நாடிய ராமதாஸ்!

மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோருவதை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி ராமதாஸ் தரப்பு ஐகோர்ட்டில் முறையிட்டுள்ளது. மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுக்கப்படும் என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. சின்னத்தை முடக்க மறுத்து உரிமையியல் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட்டை நாட அறிவுறுத்தியிருந்தது.


