News May 5, 2024

நாளை மாலை வரை கடலில் இறங்க வேண்டாம்

image

தமிழகத்தில் உள்ள கடல் பகுதிகள் நாளை மாலை வரை கொந்தளிப்புடன் காணப்படும் என இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரித்துள்ளது. காற்றின் போக்கு காரணமாக கள்ளக்கடல் சூழல் நிலவுவதால் பொதுமக்கள் கடலுக்கு அருகில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே, குமரி கோடிமுனை கடற்கரையில் பாறை மீது நின்று வேடிக்கைப் பார்த்த சென்னையைச் சேர்ந்த இருவர், ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

Similar News

News August 21, 2025

ரோகித், விராட் பெயர்கள் நீக்கப்பட்டதற்கு ICC விளக்கம்

image

ICC-ன் ODI பேட்டிங் தரவரிசையில் ரோஹித், விராட் இடம்பெறவில்லை. ICC விதிப்படி 9 மாதங்கள் எவ்வித போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தாலோ அல்லது ஓய்வு அறிவித்திருந்தாலோ வீரர்கள் பெயர்கள் நீக்கப்படும். ஆனால் இவர்கள் விஷயத்தில் அது நடக்கவில்லை. இந்நிலையில் தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக இத்தவறு நடந்ததாக ICC விளக்கமளித்துள்ளது. புதிதாக வெளியிட்ட பட்டியலில் ரோகித் மற்றும் கோலி 2 மற்றும் 4 இடங்களில் உள்ளனர்.

News August 21, 2025

தோள்பட்டை வலியை விரட்டும் பரிவர்த்த திரிகோணாசனம்!

image

✦கால்கள், முதுகு & தோள்பட்டை வலுவாகும்.
➥முதலில் இரு கால்களையும் விரித்து, ஒரு காலை சற்று முன்னே வைத்து, கைகள் இடுப்பில் வைக்கவும்.
➥கால்களை நகர்த்தாமல், முதுகை வளைத்து கைகளை தரையில் வைக்கவும். பிறகு பழைய நிலைக்கு திரும்பவும்.
➥முதுகை நேராக்கி, ஒரு கையை கீழே நோக்கி நீட்டி , மற்றொரு கையை மேலே உயர்த்தவும். வலது கால் முன்னோக்கி இருந்தால், இடது கையை மேலே உயர்த்தி இருக்க வேண்டும்.

News August 21, 2025

CM ஸ்டாலின் CPR-யை ஆதரிக்க வேண்டும்: நயினார்

image

தமிழ் பண்பாடு, தமிழர் கலாச்சாரம் என பேசி வரும் CM ஸ்டாலின், துணை ஜனாதிபதி தேர்தலில் CPR-யை ஆதரிக்கவில்லை என்றால், அவர் பேசியது வெற்று வார்த்தையாகிவிடும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். 30 நாட்கள் சிறையில் இருக்க நேரிட்டால் பதவி இழக்க நேரிடும் என்ற சட்டம் எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காக கொண்டு வந்தது இல்லை என கூறிய அவர், அது ஆளுங்கட்சிக்கும் பொருந்தும் என்றார்.

error: Content is protected !!