News January 15, 2026
திமுக அரசின் மீதான கரும்புள்ளி: நயினார்

ஆசிரியர் விஷம் குடித்து <<18857511>>தற்கொலை <<>>செய்துகொண்டது வேதனையளிப்பதாக நயினார் இரங்கல் தெரிவித்துள்ளார். ‘உங்க கனவ சொல்லுங்க’ என விளம்பர நாடகம் போடும் CM ஸ்டாலின், நியாயமான கோரிக்கைகளுக்காக போராடிய ஆசிரியர் கண்ணன் வாழ்நாள் கனவிற்கு செவிமடுக்காமல் போனதன் விளைவுதான் இந்த துர்மரணம். இது திமுக அரசின் மீதான கரும்புள்ளி. திமுகவின் அப்பட்டமான நம்பிக்கை துரோகத்திற்கு 2026-ல் முடிவு கட்டப்படும் என்றார்.
Similar News
News January 27, 2026
ஜன நாயகன் ரிலீஸ்.. இனிப்பான செய்தி வந்தாச்சு!

விஜய் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் வழக்கில் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது. ஒருவேளை ஜன நாயகன் படத்திற்கு U/A சான்றிதழ் தர வேண்டும் என்று CBFC-க்கு சென்னை HC உத்தரவிட்டால், சான்றிதழ் பெறும் வேலைகள் ஓரிரு நாள்களில் முடிந்துவிடும். இதனால், படம் வரும் பிப்ரவரி 6-ம் தேதி வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
News January 27, 2026
BREAKING: ரவுடி அழகுராஜா என்கவுண்டர்

மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளை காளியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி அழைத்து வரும்போது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலில் தொடர்புடைய அழகுராஜா என்ற ரவுடியை நேற்று போலீசார் கைது செய்தனர். பின்னர் பெரம்பலூரில் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை கைப்பற்ற போலீசார் அவரை அழைத்து சென்றபோது, அரிவாளால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற அழகுராஜா என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
News January 27, 2026
பத்திரப்பதிவில் வந்த புதிய மாற்றங்கள்!

பத்திரப்பதிவு செய்யும் போது, சொத்தின் அசல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற TN அரசின் மசோதாவிற்கு ஜனாதிபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். சொத்தில் உரிமை பெற பயன்படுத்தப்பட்ட முந்தைய மூல ஆவணத்தையும், வில்லங்க சான்றிதழை இனி கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். மூல ஆவணம் இல்லையென்றால், பட்டா சமர்பிக்க வேண்டும். மேலும், சொத்தில் அடமானம் இருந்தால், அடமான உரிமையாளரின் NOC சான்றிதழ் இல்லாமல் பதிவு முடியாது.


