News January 15, 2026
கோர ரயில் விபத்தில் 32 பேர் பலி.. 7 பேர் கவலைக்கிடம்

தாய்லாந்து ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 66 பேர் ஹாஸ்பிடலில் சிகிச்சையில் உள்ளனர். அதில், 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. நேற்று காலை, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வடகிழக்கில் உள்ள உபோன் ராட்சதானிக்கு சென்ற <<18853608>>ரயில் மீது கிரேன் விழுந்ததில்<<>> பெரும் விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 3, 2026
மணிப்பூரின் முதல்வராகிறார் யும்னம் கேம்சந்த் சிங்

மணிப்பூரின் புதிய முதல்வராக, பாஜகவின் யும்னம் கேம்சந்த் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். குக்கி, மெய்தி இனக்குழுவினர் இடையே ஏற்பட்ட தொடர் வன்முறை காரணமாக, கடந்த ஆண்டில் முதல்வர் பதவியில் இருந்து பைரன் சிங் விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து, ஓராண்டாக குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்றுவந்த நிலையில், மீண்டும் மாநில ஆட்சியை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
News February 3, 2026
தொகுதி மாறுகிறாரா சீமான்?

தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில், அரசியல் கட்சியின் தலைவர்கள் எந்தெந்த தொகுதியில் போட்டியிட போகிறார்கள் என்ற எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், 2021 தேர்தலில் திருவொற்றியூரில் போட்டியிட்ட சீமான், இந்த முறை சொந்த மாவட்டத்தை குறிவைத்துள்ளாராம். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் அவர் போட்டியிடவுள்ளதாகவும், பிப்.21-ல் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
News February 3, 2026
படுத்த படுக்கையாகிவிட்டேன்: நடிகர் அரவிந்த்சாமி

90-களில் டாப் ஹீரோவாக இருந்த நடிகர் அரவிந்த்சாமி, திடீரென சினிமாவில் இருந்து காணாமல் போனார். இந்த இடைப்பட்ட காலத்தில் தான் படுத்த படுக்கையாக இருந்ததாக அரவிந்த்சாமி கூறியுள்ளார். 2005-ம் ஆண்டு நடந்த விபத்து தன்னை ஒன்றரை வருடம் முடக்கிவிட்டதாக தெரிவித்தார். அறுவை சிகிச்சை வேண்டாம் என முடிவெடுத்ததால், அந்த வலி நீண்ட நாள் தொடர்ந்ததாகவும், பிறகு ஆயுர்வேத சிகிச்சை மூலம் குணமடைந்ததாகவும் கூறினார்.


