News January 15, 2026
BREAKING: பொங்கல் நாளில் விஜய் அறிவித்தார்

உலகமெங்கும் உள்ள தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார் விஜய். ஏற்கெனவே, தமிழ்ப் புத்தாண்டு தை மாதமா, சித்திரை மாதமா என்ற சர்ச்சை இருந்து வரும் நிலையில், தன்னுடைய இந்த வாழ்த்தில் தமிழ்ப் புத்தாண்டு என அவர் பதிவிட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது. இவ்வளவு நாள் ’ஜனநாயகன்’ பற்றி எதுவும் பேசாமல் இருந்த விஜய்யிடமிருந்து இந்த ட்வீட் வந்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
Similar News
News February 12, 2026
ரூபாய் நோட்டுகளில் ஏன் இந்த கோடுகள் உள்ளன தெரியுமா?

இந்த கோடுகளை Bleed marks என்பார்கள். இவை பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக வடிவமைக்கப்பட்டது. இவற்றை தொடுவதன் மூலம் நோட்டின் மதிப்பை அறிய முடியும். ஒவ்வொரு ரூபாய் நோட்டிலும் வெவ்வேறு வகையான அடையாளங்கள் உள்ளன *₹100 நோட்டில் ஒவ்வொரு விளிம்பிலும் 4 கோடுகள் இருக்கும் *₹200 நோட்டில் 4 கோடுகளும், நடுவில் 2 சிறிய வட்டங்கள் இருக்கும் *₹500 நோட்டில் ஒவ்வொரு பக்கத்திலும் 5 சாய்ந்த கோடுகள் இருக்கும். SHARE IT.
News February 12, 2026
ராஜகண்ணப்பன் பற்றி மக்கள் அறிவர்: பிரேமலதா

தேமுதிக எல்லாம் ஒரு கட்சியா என ராஜகண்ணப்பன் பேசியதற்கு பிரேமலதா பதிலடி கொடுத்துள்ளார். தேமுதிக கண்ணியமான கட்சி என்பதை மக்கள் அறிவார்கள் என்ற அவர், இதை சொன்னவர் எப்படிப்பட்டவர் என்பதும் மக்களுக்கு தெரியும் என்றார். மேலும், இதற்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இவர்களின் வாக்குவாதத்தால் திமுக-தேமுதிக கூட்டணி அமைவதில் பின்னடைவு ஏற்படுமா என கேள்வி எழுந்துள்ளது.
News February 12, 2026
U19 WC-யை வென்ற தமிழக வீரர்கள்.. பாராட்டிய DCM!

ENG அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி <<19069828>>இந்திய அணி<<>>, U-19 ODI WC-யை வென்றது. இந்த அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர்கள் அம்ப்ரிஷ், தீபேஷ் இருவரையும் நேரில் அழைத்து DCM உதயநிதி பாராட்டியுள்ளார். அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தவர், நினைவுப் பரிசும் வழங்கியுள்ளார். இதுகுறித்து பதிவில், சிறப்பான திறமையை இவர்கள் வெளிப்படுத்தி வருவது நம் அனைவருக்கும் பெருமை என்று குறிப்பிட்டுள்ளார்.


