News January 15, 2026
நத்தம் அருகே வசமாக சிக்கிய மூவர்!

நத்தம் காவல் ஆய்வாளர் பொன்குணசேகரன் தலைமையிலான போலீசார் குட்டுபட்டி – பாலப்பட்டி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட பிரபாகரன் (30), பெருமாள் (23) மற்றும் ஆறுமுகம் (23) ஆகிய மூன்று பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சூதாட்டப் பணம் மற்றும் சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Similar News
News February 3, 2026
திண்டுக்கல்: நிலம் வாங்க ரூ.5 லட்சம் வேண்டுமா?

1.நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது
2.குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
3.2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்
4.100 சதவித முத்திரைத்தாள்,பதிவுக்கட்டணம் இலவசம்
5. <
6.மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகலாம்.SHARE பண்ணுங்க!
News February 3, 2026
விஜய் விமர்சனம்: அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலடி!

திண்டுக்கல்: திமுகவை ‘பழைய டப்பா’ என தவெக தலைவர் விஜய் விமர்சித்த நிலையில், கரூரில் உயிரிழந்தவர்களை பார்க்க மனமில்லாத விஜய், எப்படி 8 கோடி மக்களை காப்பாற்ற போகிறார் என அமைச்சர் ஐ.பெரியசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சினிமா அரசியல் மக்கள் மத்தியில் எடுபடாது என்று சாடிய அவர், “இந்த டான்ஸ் பழைய டான்ஸ், இவரின் டப்பாங்குத்து இங்கே வேலை செய்யாது” என தெரிவித்துள்ளார்.
News February 3, 2026
திண்டுக்கல்: தொழில் தொடங்க ரூ.3 லட்சம் கடன்

திண்டுக்கல் மக்களே, மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு மத்திய அரசு “உத்யோகினி யோஜனா” திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கடன் உதவி வழங்குகிறது. இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <


