News January 15, 2026

காந்திபுரம் பாலத்தில் இருந்து குதித்தவர் உயிரிழப்பு

image

கோவையைச் சேர்ந்தவர் ரமேஷ் (43). இவரது மகன் ஜெகன் (17). இவர் காந்திபுரம் மேம்பாலத்தில் இருந்து கடந்த 7-ம் தேதி கீழே குதித்தார். பின்னர் படுகாயம் அடைந்த அவர் கோவை GH-ல் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News February 8, 2026

உக்கடத்தில் போலீஸ் தீவிர கண்காணிப்பு

image

கோவை, உக்கடம் வாலாங்குளத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காதல் ஜோடி ஒன்று அங்கிருந்த கழிப்பறையில் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து கோவை மாநகர போலீசார் பகல் நேரங்களில் மட்டுமல்லாது இரவு நேரங்களிலும் தங்களது கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

News February 8, 2026

கோவை: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

கோவை வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். SHARE

News February 8, 2026

பொள்ளாச்சியில் பயங்கர விபத்து: திமுக பிரமுகர் பலி

image

பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்குமார். இவர், ஆனைமலை வடக்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளராக இருந்தார். அவர், பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது ஜமீன் ஊத்துக்குளி அருகே, எதிரே வந்த சரக்கு வாகனம், இருசக்கர வாகனம் மீது மோதியது. அதில், படுகாயம் அடைந்த மனோஜ்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

error: Content is protected !!