News January 15, 2026
திருப்பத்தூரில் பகுஜன் சமாஜ் கட்சியினர் புகார்

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று (ஜன.14) நடைபெற்ற மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினரை தொடர்ந்து இழிவுபடுத்தி பேசி வரும் சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அக்கட்சியை சேர்ந்த அஸ்லம் பாஷா புகார் மனு அளித்தார். உடன் ஆல்பர்ட், ரஞ்சித் குமார், ராஜேந்திரன் ஆகியோர் சென்று மனு அளித்தனர்.
Similar News
News February 19, 2026
ஆம்பூரில் கொடுமை!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் மூட்டு கொள்ளை பகுதியில் நேற்று (பிப்ரவரி 18) மாலை 6 வயது சிறுமியிடம் சேய்த அசாத் (40) என்பவர் பாலியில் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மூட்டை தூக்கும் தொழிலாளியான இவரை ஆம்பூர் மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். சிறுமிக்கு நடந்த இந்த கொடுமையால் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
News February 19, 2026
ஜோலார்பேட்டை அருகே இளைஞர் மீது கொடூர தாக்குதல்!

ஜோலார்பேட்டை அருகே திரியாலம் சேர்ந்தவர் சுதாகர் என்பவர் தனது வீட்டின் அருகில் நேற்று (பிப்.18) நின்று கொண்டிருக்கும் பொழுது வழி பிரச்சனை காரணமாக பக்கத்து வீட்டு சேர்ந்த முருகன் உள்ளிட்ட 2 பேர் சுதாகர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி உள்ளனர். படுகாயம் அடைந்த சுதாகர் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜோலார்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகினறார்.
News February 19, 2026
திருப்பத்தூர்: கணவனை நடுரோட்டில் அடித்து உதைத்த மனைவி!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த எம் ஆர் செட் அருகே இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. திருமணம் ஆனதை மறைத்து 2வது திருமணம் செய்த கணவரை, அவரது முதல் மனைவி நடுரோட்டில் வைத்து சரமாரியாக தாக்கினார். இதனால் வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


