News May 5, 2024

மீன்களின் விலை 2 மடங்கு உயர்ந்தது

image

மீன்களின் விலை 2 மடங்கு அதிகரித்துள்ளதால் அசைவப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் ஏப்.15 முதல் மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளது. இதனால் மீன்களின் வரத்து கணிசமாக குறைந்தது. இந்நிலையில் நேற்று வரை ₹100, ₹200க்கு விற்பனையான மீன்கள் இன்று ₹200, ₹400 என விலை உயர்ந்தது. ஞாயிற்றுக் கிழமையான இன்று, கூட்டம் அலைமோதியதால் மீன்களின் விலை 2 மடங்காக உயர்ந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News August 20, 2025

திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

image

மாற்றுக்கட்சியினரை திமுகவில் இணைக்கும் பணி வேகமெடுத்துள்ளது. இந்நிலையில், பாஜக முன்னாள் கரூர் தெற்கு மாநகர தலைவர், அதிமுக கரூர் தெற்கு மாநகர ஐடி விங் துணை செயலாளர் உள்ளிட்ட பலர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு திமுக அடையாள அட்டையை வழங்கி, தேர்தல் பணி மற்றும், ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை தீவிரப்படுத்த செந்தில் பாலாஜி அறிவுறுத்தினார்.

News August 20, 2025

உடல் எடையை குறைக்க உதவும் நவாசனம்!

image

✦இது வயிறு, தொடை, இடுப்பு, தோள்பட்டை & கழுத்து தசைகளை வலிமைப்படுத்துகிறது.
➥தரையில் கால்களை நேராக நீட்டி, முதுகை நேராக வைத்து உட்காரவும்.
➥முதுகு நேராக வைத்து, கால்களை மெதுவாக மேலே உயர்த்தி,
கைகளை முன்னோக்கி நீட்டவும்.
➥இந்த நிலையில் 10 வினாடிகள் இருந்து, விட்டு பிறகு பழைய நிலைக்கு திரும்பவும்.

News August 20, 2025

கார்த்தியை அழைத்து பேசிய கமல்? காரணம் என்ன?

image

‘கூலி’ முடிந்தவுடன் லோகேஷ் கைதி 2 பண்ணுவதாக இருந்தது. ஆனால் தற்போது அவர் ரஜினி, கமல் வைத்து ஒரு படம் இயக்க இருப்பதாகவும், அதனை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் கமல் தனிப்பட்ட முறையில் கார்த்தியை அழைத்து பேசியிருப்பதாகவும், கார்த்தி சம்மதத்துடனே தற்போது லோகேஷ் ‘கைதி 2’ பணிகளை விட்டுவிட்டு ரஜினி கமல் படத்துக்கான பணிகளை துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!