News May 5, 2024

தேனி: வீரபாண்டி கோயிலில் பலத்த காற்று

image

தேனி அருகே உள்ள வீரபாண்டியில் சித்திரை திருவிழா வரும் 7ஆம் தேதி முதல் மே 14ஆம் தேதி வரை விமரிசையாக நடைபெற உள்ளது.  வீரபாண்டி முல்லை ஆற்றங்கரை ஓரத்தில் பழம் மற்றும் பூக் கடைகள் தகர கொட்டகை அமைத்து நடத்தி வருகின்றனர். இன்று பலத்த காற்றுடன் மழை பெய்ததால் தென்னை மரம் ஒன்று சாய்ந்து கீழே விழுந்ததில் தகர கடைகள் நொறுங்கியது. இதில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

Similar News

News August 14, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை பெரியகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நல்லு தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. உதவி தேவைப்படுவோர் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 13, 2025

நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் மனு அளித்த நிர்வாகிகள்

image

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சி பகுதியில் பேருந்து நிலையம் முன்பும், அரசு மருத்துவமனை முன்பும் தேசிய நெடுஞ்சாலை மிகவும் பழுதடைந்து போக்குவரத்திற்கு சாதகமற்ற ஆபத்தான சூழ்லில் உள்ளது. இதனை உடனே சரி செய்யக்கோரி உத்தமபாளையம் நகர எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக நகர தலைவர் சகுபர் சாதிக் தலைமையில் உத்தமபாளையம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் கோரிக்கை மனுவை நிர்வாகிகள் அளித்தனர்.

News August 13, 2025

தேனியில் சிறுமி உயிரிழப்பு

image

கூடலுார் பகுதியை சேர்ந்த அரவிந்தனின் மகள் சிவானி (11). பள்ளி மாணவியான இவர் அதே பகுதியில் உள்ள இவரது பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்தார். நேற்று முன் தினம் பாட்டி வீட்டில் உள்ள சேலையில் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் சிறுமி விளையாடி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தொட்டில் சிறுமி கழுத்தை இறுக்கியது. இதில் சிறுமி உயிரிழந்தார். இதுக்குறித்து கூடலுார் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

error: Content is protected !!