News January 14, 2026
வாக்காளர் பட்டியில் பெயர் சேர்க்க 59,367 பேர் விண்ணப்பம்

குமரியில் புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரையிலும் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 59,367 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. மேலும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள 12,670 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். இம்மாதம் 18-ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
Similar News
News February 20, 2026
கன்னியாகுமரி: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

(20.02.2026) கன்னியாகுமரி மாவட்டம் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இரவு நேரங்களில் வெளியில் பயணிக்கும் நபர்கள் ஆபத்தான சூழலில் மேலே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. .
News February 20, 2026
திறன் மேம்பாட்டு பயிற்சி – ஆட்சியர் அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்ட பதிவு செய்யப்பட்ட கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 40 பிரிவுகளில் 10,000 இடங்களுக்கான ஆன்லைன் திறன் மேம்பாட்டு பயிற்சியை தமிழ்நாடு கட்டுமான கழகம் வழங்குகிறது. இதில் விருப்பமுள்ள மாணவர்கள் https://application.tnbocw.com என்ற இணையதளம் வாயிலாகவோ (அ) மார்த்தாண்டத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணைய அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.
News February 20, 2026
கன்னியாகுமரி: Whatsapp-ல் ஆதார்-ஐ பெறுவது எப்படி..?

குமரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே <


