News January 14, 2026
தருமபுரி விவசாயிகளுக்கு அரிய வாய்ப்பு!

தருமபுரி மாவட்ட வேளாண் விவசாயிகளுக்கு பாரம்பரிய வேளாண்மை (இயற்கை வேளாண்மை) குறித்த இரண்டு நாள் உண்டு உறைவிடப் பயிற்சி முகாம் வரும் ஜனவரி 24, 25 வெள்ளக்கல் கிராமத்தில் நடைபெற உள்ளது. இந்த கட்டணமில்லா பயிற்சியில் வேளாண் விவசாயிகள் பங்கேற்க முன்பதிவிற்கு பாரம்பரிய வேளாண் குழுவை தொடர்புகொண்டு 9597376088 தங்கள் பெயர் பதிவு செய்து கொள்ள அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Similar News
News January 30, 2026
கிருஷ்ணகிரி: கணவன் கண் முன்னே மனைவி பலி!

கிருஷ்ணகிரி மாவட்டம். பாரதி நகரை சேர்ந்தவர் மாதையன் (57), மனைவி தனலட்சுமி (48). இருவரும் நேற்று (ஜன.29) தருமபுரியில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பின் பைக்கில் மாட்டலாம்பட்டி அருகே வந்த போது பைக் மீது லாரி மோதியது. இதில் தனலட்சுமி சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த மாதையன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 30, 2026
தருமபுரியில் தூக்கி வீசப்பட்டு பலி!

பெருங்காட்டை சேர்ந்த தொழிலாளி கன்னியப்பன் (33). இவர் தனது குடும்பத்துடன், பாப்பாரப்பட்டியிலுள்ள செங்கல் சூளையில் தங்கி பணி செய்து வந்தார். இவர் செங்கல் சூளைக்கு பைக்கில் சென்ற போது ஏரிக்கரை அருகே வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கன்னியப்பன் தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் கிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 30, 2026
தர்மபுரி : காவல் துறை ரோந்து பணி விவரம்

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று (ஜன.29) இரவு முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சேகர் தொப்பூரில் ராமகிருஷ்ணன், மதிகோன்பாளையத்தில் மகாலிங்கம் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!


