News January 14, 2026

நள்ளிரவில் பஸ்களை ஆய்வு செய்த அமைச்சர்!

image

பொங்கல் பண்டிகையை கொண்டாட நேற்று ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இந்நிலையில், நள்ளிரவில் கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் அமைச்சர் சிவசங்கர் திடீரென ஆய்வு செய்தார். அப்போது, குறிப்பிட்ட நேரத்தில் பேருந்துகள் புறப்படுகின்றனவா, டிக்கெட் விலை சரியாக உள்ளதா என்பதை மக்களிடமும் கேட்டறிந்தார். மேலும், கூடுதல் கட்டணத்தை தடுக்க 36 குழுக்கள் தணிக்கை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Similar News

News February 3, 2026

பிரபல இசையமைப்பாளர் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

image

பழம்பெரும் இசையமைப்பாளர் SP வெங்கடேஷ்(70) மாரடைப்பால் காலமானார். கிட்டார் கலைஞராக இசைப் பயணத்தை தொடங்கிய அவர், தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். ‘உனக்காக என் காதல்’, ‘பிஞ்சு மனசு’ உள்ளிட்ட தமிழ் படங்களுக்கு இசையமைத்துள்ள வெங்கடேஷ், ஃபிலிம்ஃபேர் உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார். அவரது இறுதிச் சடங்கு சென்னையில் நாளை நடைபெறவுள்ளது. RIP

News February 3, 2026

வரியை குறைக்க வைத்த இந்தியாவின் ராஜதந்திரம்

image

இந்தியாவை ‘Tariff King’ என விமர்சித்த US அதிபர் டிரம்ப், தற்போது நண்பர் என்று கூறி வரியை குறைத்துள்ளார். US-ன் கூடுதல் வரிவிதிப்புக்கு பிறகு இந்தியா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்தது போன்றவை USA-ஐ கலங்கடித்திருக்கலாம் எனப்படுகிறது. அதன் காரணமாகவே, US அதிபர் வரியை 50%-ல் இருந்து 18%-ஆக குறைத்து அறிவித்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

News February 3, 2026

ஜெயக்குமார் அதிமுகவில் இருந்து விலகினாரா? CLARITY

image

கடந்த சில மாதங்களாக தலைகாட்டாமல் இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், விரைவில் கட்சியில் இருந்து விலகி வேறு கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தனது உயிர் உள்ளவரை அதிமுகவிலேயே நீடிப்பேன் என, கட்சி மாறப்போவதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், வரும் தேர்தலில் தொகுதி மாறப் போவதாக (தற்போது ராயபுரம்) வரும் தகவலிலும் உண்மையில்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.

error: Content is protected !!