News January 14, 2026
திருப்பத்தூர்: மது போதையில் வாலிபர்கள் அட்டூழியம்!

தேவலாபுரம் அடுத்த ஸ்டார் சிட்டி பகுதியில் நேற்று முன்தினம் (ஜன.12) இரவு அஸ்ரத் (22), அம்பேத்கர் நகரை சேர்ந்த நாகப்பன் (21), எல்.மாங்குப்பத்தை சேர்ந்த நிதிஷ் (20) ஆகியோர் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் அஸ்ரத்தாய் மற்ற இருவரும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இது குறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
Similar News
News February 5, 2026
திருப்பத்தூர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

திருப்பத்தூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <
News February 5, 2026
அறிவித்தார் திருப்பத்தூர் எஸ்.பி!

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆலங்காயம், காவலூர், அம்பலூர், வாணியம்பாடி, உமராபாத், குருசிலாப்பட்டு, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி காவல் நிலையங்கள் பணியாற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் 13 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி பணி மாறுதல் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். நிர்வாக காரணங்களுக்காக பணி மாறுதல் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
News February 5, 2026
வாணியம்பாடி: அரசு மருத்துவர் தற்கொலை!

திருப்பத்தூர்: வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக கடந்த பல மாதங்களாக பணியாற்றி வந்த, சிவசுப்பிரமணியம் என்பவர் நேற்று (04.02.2026) வாணியம்பாடியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இந்நிலையில், சிவ சுப்பிரமணியத்தின் உடலை மீட்டு வாணியம்பாடி நகர காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


