News May 5, 2024
பேருந்தில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

பூந்தமல்லியில் இருந்து நேற்று மதியம் காஞ்சீபுரம் நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று நசரத்பேட்டை அருகே திடீரென பிரேக் போட்டதால் பேருந்து படியில் நின்று கொண்டிருந்த நடத்துனர் முருகன் நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த முருகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக பேருந்து ஓட்டுநர் சகாதேவன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
Similar News
News July 6, 2025
திருவள்ளூர் மாவட்ட இளைஞர் ஒடிசா மாநிலத்தில் கொலை

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் சட்ட விரோதமாக கஞ்சா கொள்முதலுக்காக ஒடிஷா மாநிலம் சென்றுள்ளார். அவரை பிடித்து வைத்து, 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய கும்பல், அவரை கொலை செய்து, பிணத்தை வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடத்தல் கும்பல் பணம் கேட்டு மிரட்டுவது குறித்து போலீசில் புகார் கொடுத்தும், நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தியடைந்த மக்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்
News July 5, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News July 5, 2025
பிரசித்திபெற்ற பைரவர் கோயில்

திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூரில் பிரசித்திபெற்ற ஸ்ரீ ஆகாஸ பைரவர் ஆலையம் உள்ளது. இந்த கோயிலின் சிறப்பே அஷ்ட பைரவர்கள் எட்டு பைரவர்கள் உள்ளனர். ஒரே இடத்தில் இந்த 8 பைரவர்களை தரிசனம் செய்யும் அற்புத தலமாக உள்ளது. மேலும், தொலைந்த பொருளை மீட்க, செல்வம் பெருக இங்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றப்படுகிறது. மேலும் திருமணத்தடை நீங்க ஞாயிறு அன்று ராகு காலத்தில் விபூதி அபிஷேகம் செய்யப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.