News January 14, 2026

திருவள்ளூரில் துடிதுடித்து பலி!

image

ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம், வெடியங்காடு கிராமம், மதுரா புதூர் பகுதியைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள்(75). இவர் பெங்களூரில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், பொங்கல் பண்டிகையைக் கொண்டாட நேற்று(ஜன.13) அதிகாலை ஊருக்கு வந்த அவர், வயல் வெளியில் நடந்த போது, மின் கம்பியை மிதித்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News January 25, 2026

திருத்தணியைச் சேர்ந்தவருக்கு பத்மஸ்ரீ விருது

image

திருத்தணி சுவாமிநாதன் (76) ஆறு தசாப்தங்களுக்கும் மேலாகத் தேவாரத் திருமுறைகளைப் பாடிவரும் மூத்த ஓதுவார் ஆவார். தருமபுர ஆதீனப் பள்ளியில் மாணவர்களுக்குத் தேவாரப் பாடல்களைக் கற்பித்து வரும் இவர், மதுரை சோமுவின் இசையால் ஈர்க்கப்பட்டு இப்பணியில் ஈடுபட்டுள்ளார். ஓதுவார் நலச்சங்கம், பக்தஜன சபை போன்ற அமைப்புகளில் தேவாரத் திருவாசக இன்னிசை நிகழ்ச்சிகளை நடத்தும். இவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது

News January 25, 2026

திருவள்ளூர் மக்களே இனி அலைச்சல் இல்லை!

image

திருவள்ளூர் மக்களே பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம். 1) ஆதார் : https://uidai.gov.in/, 2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in, 3) பான் கார்டு : incometax.gov.in 4) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in 5) திருவள்ளூர் மாவட்ட அறிவிப்புகளை அறிய: tiruvallur.nic.in மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க

News January 25, 2026

திருவள்ளூர்: டிகிரி போதும்-அரசு வேலை!

image

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள Development Assistant (வளர்ச்சி உதவியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்:162
3. வயது – 21 – 35
4. சம்பளம்: ரூ.32,000
5. தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 03.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!