News January 14, 2026
குமரி: பைக் மோதி பெண் பலி

திங்கள்சந்தை அருகே வாடிவிளையைச் சேர்ந்தவர் மேரி ஜெனட்(50). இவர் அந்தப் பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த பைக் அவர் மீது மோதியது. இதில் தலையில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 8, 2026
குமரி: விஷம் குடித்து ஒருவர் தற்கொலை

குமரி, காடேற்றியை சேர்ந்தவர் சந்திரன் (66). விவசாயியான இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு இவரது மனைவி உயிரிழந்தார். இதனால் வேதனையில் இருந்து வந்த சந்திரன் நேற்று அவரது மனைவி கல்லறையின் அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு.
News February 8, 2026
குமரி: சங்கு எடுக்க முயன்ற மீனவர் பரிதாப பலி

இனயம் நடுத்தேரி பகுதியை சேர்ந்த ஏசுபாலன் 2 பேருடன் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் தேங்காப்பட்டினம் கடல் பகுதியில் சங்கு எடுப்பதற்காக சென்றார். சங்கு எடுத்து கொண்டிருக்கும்போது மூவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் வெளியே வந்த மூவரையும் மீனவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் ஏசுபாலன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக குளச்சல் கடலோர பாதுகாப்பு குழு போலீசார் வழக்குப்பதிவு.
News February 7, 2026
குமரியில் இரவு காவல் ரோந்து அதிகாரிகள் அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவிப்பின்படி, இன்றைய (07.02.2026) இரவு ரோந்து அதிகாரிகள் குறித்த அட்டவணை தகவல்கள் வெளியாகி உள்ளது. உங்கள் பகுதிகளில் எந்த விதமான குற்ற சம்பவங்கள் நடந்தாலும், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் எண்ணிற்கு உடனே அழையுங்கள் என கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


