News January 14, 2026
செங்கல்பட்டு: வாகன விபத்தில் 2 மான்கள் பலி!

அச்சரப்பாக்கம் அருகே வஜ்ரகிரி மலை அடிவாரத்தில் உள்ள சமூக காட்டில் இருந்து சென்னை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை கடந்த, இரண்டு வயது மதிப்புள்ள ஆண் மற்றும் பெண் புள்ளிமான்கள் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அச்சிறுப்பாக்கம் வனத்துறையினர் மான்களின் உடலை கைப்பற்றி, காப்பு காட்டில் புதைத்தனர்.
Similar News
News February 7, 2026
செங்கை: போஸ்ட் ஆபீஸில் 2019 காலியிடங்கள்! APPLY NOW

செங்கை மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News February 7, 2026
செங்கல்பட்டில் பாதிப்பட்டுள்ள 10 கிராமங்கள்

செங்கல்பட்டு – திருக்கழுக்குன்றம் சாலையில், மேலமையூர் ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் 9 ஆண்டுகளாகக் கிடப்பில் உள்ளன. நெடுஞ்சாலைத் துறை மற்றும் ரயில்வே துறையின் மெத்தனத்தால், 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆபத்தான முறையில் தண்டவாளத்தைக் கடக்க வேண்டியுள்ளது. கழிவுநீர் தேங்கி குப்பை மேடாக மாறியுள்ள இப்பகுதியை மாவட்ட ஆட்சியர் சினேகா நேரில் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
News February 7, 2026
செங்கை: 5 பேர் அதிரடி கைது!

மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நேற்று அதிகாலை தாய்லாந்து நாட்டில் இருந்து வந்த விமான பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது 23 கிலோ எடையுள்ள உயர் ரக கஞ்சாக்களை பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களில் பதுக்கி வைத்து கடத்தி வந்த 5 இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தப்பட்ட கஞ்சாக்களின் மதிப்பு 23 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.


