News January 14, 2026

கடலூர்: ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று(ஜன.13) இரவு 10 மணி முதல் இன்று(ஜன.14) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 20, 2026

கடலூர்: உங்க போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

image

கடலூர் மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News February 20, 2026

கடலூர்: இளைஞர்களுக்கு அழகு கலை பயிற்சி – ஆட்சியர் அறிவிப்பு

image

கடலூர் மாவட்ட ஆதிதிராவிடர் & பழங்குடியின இளைஞர்களுக்கு தாட்கோ மூலம் அழகுக்கலை பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சியில் 10 ஆம் வகுப்பு முடித்து 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் பங்குபெறலாம். மேலும் பயிற்சி முடிந்து ஊதியமாக ரூ 18,000 முதல் 25,000 வரை வழங்கப்படும். இதற்கு <>www.tahdco.com<<>> என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News February 20, 2026

9 சட்டமன்ற தொகுதிக்கும் 258 மண்டல அலுவலர்கள் நியமனம்!

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மண்டல அலுவலர்களை நியமித்துள்ளார். அதன்படி, திட்டக்குடி 27, விருத்தாசலம் 32, நெய்வேலி 24, பண்ருட்டி 26, கடலூர் 29, குறிஞ்சிப்பாடி 29, புவனகிரி 31, சிதம்பரம் 31, காட்டுமன்னார்கோவில் 29 என மொத்தம் 258 மண்டல தேர்தல் அலுவலர்கள் நியமித்துள்ளார். மேலும் இவர்கள் வாக்குச்சாவடியில் அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்தவர்.

error: Content is protected !!