News January 14, 2026

ராணிப்பேட்டை காவல் துறை இரவு ரோந்து விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை சார்பில் இன்று நடைபெறும் இரவு ரோந்து பணிகளுக்கான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ராணிப்பேட்டை, அரக்கோணம் பகுதிகளுக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்புக்காக இரவு ரோந்து மேற்கொள்ளப்படுகிறது.

Similar News

News February 17, 2026

ராணிப்பேட்டையில் வெடிகுண்டா?

image

ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு இ-மெயில் மூலம் நேற்று (பிப்.16) மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அனால் இது பொய் செய்தி என தெரிய வந்தது. ஏற்கனவே கடந்த ஜனவரி 6-ஆம் தேதி நீதிமன்ற வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருந்ததால் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.

News February 17, 2026

ராணிப்பேட்டையில் வாலிபர் துடிதுடித்து பலி!

image

திருமலைச்சேரியை சேர்ந்த தனியார் கம்பனி ஊழியர் பிரவீன்குமார் (21). இவர் நேற்று (பிப்.16) அதிகாலை வீட்டுக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது சென்னை-பெங்களூரு NH -ல் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்த பைக் முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. அதில் தூக்கி வீசப்பட்ட பிரவீன்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 17, 2026

ராணிப்பேட்டை: தண்ணீர் தொட்டியில் ஆண் சடலம்!

image

அம்மனூர் சிப்காட் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் நேற்று (பிப்.16) வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். தகவலறிந்த அரக்கோணம் டவுன் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இறந்தவர் சென்னை தனியார் வங்கியில் பணியாற்றும் கஜபதி (41) என்பது தெரிந்தது. இது கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!