News May 5, 2024

நாளொன்றுக்கு எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும்?

image

சிலர் 3 லிட்டர், 4 லிட்டர் என்று கணக்கு வைத்து தண்ணீர் குடிப்பது வழக்கம். அது அநாவசியம் என்கிறார் சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவர் நவிநாத். அதேபோல, தாகமே இல்லாவிட்டாலும் தண்ணீர் குடிக்கும் நடைமுறையும் தேவையற்றது என்கிறார். நமது உடலுக்கு எப்போதெல்லாம் தண்ணீர் தேவையோ, அப்போதெல்லாம் அது தாகம் என்னும் சமிஞ்சையை கொடுக்கும். அப்போது மட்டும் தேவையான தண்ணீர் அருந்தினால் போதுமானது.

Similar News

News December 8, 2025

தெலுங்கு நடிகருடன் மீனாட்சி சௌத்ரி காதலா?

image

GOAT-ல் விஜய்யுடன் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் மீனாட்சி சௌத்ரி. இவர் நாகார்ஜுனாவின் உறவினரான நடிகர் சுஷாந்தை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் தாங்கள் இருவரும் நண்பர்கள் தான் என மீனாட்சி விளக்கம் அளித்துள்ளார். மேலும், தெலுங்கில் நடிக்க தொடங்கியதில் இருந்து இப்படித்தான் மாதம் ஒரு நடிகருடன் தன்னை தொடர்புபடுத்தி செய்தி வருவதாகவும் அவர் காட்டமாக தெரிவித்துள்ளார்.

News December 8, 2025

INTERNET வேண்டாம்.. மொபைல் மூலம் பணம் அனுப்பலாம்

image

இனி இண்டெர்நெட் இல்லாமலும் UPI பணப்பரிவர்த்தனை செய்யலாம் என NPCI தெரிவித்துள்ளது. உங்கள் பேங்க் அக்கவுண்ட்டில் லிங்க் செய்யப்பட்டிருக்கும் மொபைல் எண்ணிலிருந்து, ‘*99#’ என்பதற்கு டயல் செய்யவும். கேட்கும் விவரங்களை அடுத்தடுத்து உள்ளீடு செய்து, அக்கவுண்ட்டை ஆஃப்லைனில் பதிவுசெய்ய வேண்டும். பின், மீண்டும் ‘*99#’ என்பதற்கு டயல் செய்து, தேவைப்படும் நபருக்கு, ஒரு பரிவர்த்தனைக்கு ₹5,000 வரை அனுப்பலாம்.

News December 8, 2025

ED கடிதம் கிடைத்தது எப்படி? CBCID-க்கு மாற்றிய TN அரசு

image

நகராட்சி நிர்வாக துறையில் அரசுப் பணி வழங்கியதில் ₹250 கோடி முறைகேடு நடந்துள்ளது பற்றி தமிழக டிஜிபி வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என ED கடிதம் எழுதியதாக மதுரையைச் சேர்ந்த ஒருவர் HC அமர்வில் மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த HC, ED எழுதியதாக கூறப்படும் கடிதம் எப்படி மனுதாரருக்கு கிடைத்தது என கேள்வி எழுப்பியது. இதனை போலீஸ் விசாரித்து வந்த நிலையில், விசாரணை CBCID-க்கு மாற்றப்பட்டுள்ளது.

error: Content is protected !!