News January 13, 2026

பொங்கல் பண்டிகை.. தமிழக அரசு ஜாக்பாட் அறிவிப்பு

image

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகியவற்றில் 1,03,123 பேர் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இவர்களுக்கு சாதனை ஊக்கத் தொகையாக ₹85 – ₹625 வரை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே பொங்கல் பண்டிகைக்கு ₹3,000 பரிசுத் தொகை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News February 2, 2026

தோல்வி பயத்தில் ஸ்டாலின்: நயினார்

image

தோல்வி பயத்தில் இருக்கும் <<19023321>>ஸ்டாலின் <<>>அவர்களே, மாநிலத்திற்கு பட்ஜெட் போடச் சொல்லி 5 வருட ஆட்சியை வழங்கிய மக்களுக்கு, நீங்கள் அல்வா கிண்டிக் கொடுத்த கரண்டி அடிப்பிடித்துக் கிடக்கிறது என நயினார் பதிலடி கொடுத்துள்ளார். கவர்ச்சிகர அறிவிப்பு மூலம் ஆட்சியை பிடித்து மக்களை ஏமாற்றும் வழக்கம் உங்களுடையது(திமுக); அது NDA அரசின் பாணி அல்ல எனக் குறிப்பிட்ட அவர், வாழ்க தமிழ்! ஒழிக திமுக! என்று தெரிவித்துள்ளார்.

News February 1, 2026

இந்தியாவின் நாயகன் காலமானார். RIP

image

வெயில், மழை, பனி என அனைத்தையும் தாங்கிக் கொண்டு மக்களுக்காக எல்லையில் பணியாற்றிய ஒரு நாயகனை தாய்த்திரு நாடு இழந்துள்ளது. ஒடிசாவைச் சேர்ந்த 31 வயதே ஆன ராணுவ வீரர் ஜித்து பெஹெரா, காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது மாரடைப்பால் காலமானார். ஒடிசா CM மோகன் சரண் மாஜி உள்ளிட்டோர் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்தனர். இதனையடுத்து, சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் அந்த வீரனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

News February 1, 2026

குறட்டை விட்டால் மாரடைப்பு வரும்.. உஷார்

image

தூங்கும்போது மூச்சுப்பாதையில் தசைகள் இடையூறு விளைவிப்பதால் குறட்டை ஏற்படுகிறது. இந்த பிரச்னையை ஸ்லீப் அப்னீயா (sleep apnea) என டாக்டர்கள் கூறுகின்றனர். குறட்டை விடும் பிரச்னையின் காரணமாக ரத்த அழுத்தம் ஏற்படலாம். உடல் பருமன் உள்ளவர்கள் என்றால் சர்க்கரை நோய் பாதிக்கும் அபாயமும் உள்ளது. இதுபோன்ற வாழ்வியல் சார்ந்த பிரச்னைகளால் இதயம் பலவீனமடைதல் & மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாம்.

error: Content is protected !!